
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். சினிமாவை மிஞ்சும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர், விரட்டி பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு, அங்கித் திவாரியை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். […]

மதுரையில் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் லிப்டில் சிக்கியவர் உயிரிழந்தார். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர் வழியிலேயே உயிரிழந்தார். மின் கசிவு காரணமாக நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை தெற்கு மாசி வீதியில் நகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுரை சோழவந்தான் அருகே 4 பேர் கொண்ட கும்பல் மது கடை ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு ஒரு லட்ச ரூபாய் மற்றும் அருகே இரும்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் கணேஷ்குமார் சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு கிளம்பியுள்ளார். இதனை நோட்டமிட்டு நான்கு பேர் கொண்ட கும்பல் கடை அருகே அவரை அரிவாள் முனையில் கணேஷ்குமாரை மிரட்டி கடையில இருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்தது. […]

மதுரை தெப்பக்குளத்தில் இரண்டாவது நாளாக கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை ஆற்று பகுதியில் இருந்து கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கொண்டு செல்லப்படும் நீரில் கழிவு நீர் கலந்து செல்வதால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் மீன்கள் செத்து மிதப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். […]

மதுரையில் தரமற்ற போடப்பட்ட சாலையில் மணல் லாரி சிக்கி கொண்டதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை கோமதிபுரம் அம்பிகை நகர் ஒன்றாவது தெருவில் எட்டாவது தெருவில் 15 நாட்களுக்கு முன்னர் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் புதிய சாலை தரம் இன்றி போடப்பட்டதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு மீண்டும் சேதமடைந்தன. தரமற்ற சாலையின்றி புதிய சாலை மீண்டும் அமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக கட்டுமான பணிக்காக மணல் […]

மதுரையில் காதலன் குடும்பத்தினர் தாக்கியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், கடலூர் கிழக்கு தெருவை சேர்ந்த சின்னக்கா என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான பாக்கியம் என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு காதலியை, காதலன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பாக்கியத்தின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் சின்னக்காவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதலி வீட்டினருகே உள்ள மரத்தில் […]

மதுரையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 26 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் ஆவின் பால் விநியோகம் 3 மணி நேரம் தாமதமானதாக கூறி ஆவின் பால் பண்ணையை முகவர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான வீதிக்குளம், முல்லை நகர், ராயகுளம், பூசா குளம், ஆனந்தம் நகர், பனங்காடி உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட பால் டெம்போ முகவர்களுக்கு தொடர்ச்சியாக காலை 4 மணிக்கு பால் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களின் தொடர்ச்சியாக இன்றும் விநியோகம் தாமதமாகிறது. இதனால் பால்விற்கும் முகவர்கள் சாலை […]

மதுரையில் மயானத்தில் நடந்த இறுதி சடங்கின் பொழுது மின்னல் தாக்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த அய்யம்மாள் என்பவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில் மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. அதில் உறவினர்கள் பங்கேற்ற நிலையில் திடீரென மழை பெய்ததால் அனைவரும் அங்கிருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்பொழுது மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியதில் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் […]