
முதலமைச்சர் ஸ்டாலின் அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், திமுக இன்று ரவுடித்தனத்தை அரங்கேற்றினர்; செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தாங்கள் இன்னமும் ‘பழைய’ திமுகதான் என்பதை நிரூபித்தனர். இது, தமிழக அளவில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாநகராட்சியில், 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இன்று (11.05.2022) காலை 11.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் 15 பேருக்கு மட்டும், தனியாக இருக்கை […]

மதுரை மாவட்டத்தில் வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராவ். இவர் தனது வளர்ப்பு மகளுடன் வசித்து வந்த நிலையில் நிவேதா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் தனியாக இருந்த நிலையில் மர்மமான நபர்களால் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் […]

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேலிபட்டி ஊராட்சி பகுதியில் தாதகவுண்டன்பட்டி பெரியகண்மாய் மறுகால் வழிப்பாதையை முன்னாள் தாசில்தார் கணவர் அழகர்சாமி என்னும் தனிநபர் குறுக்கே வேலி அமைத்து கம்பிக்கதவுகள் ஏற்படுத்தி பாதையை ஆக்கிரமித்து நீர்வழித்தடத்தை தடை செய்துள்ளனர். இதனால் விவசாயிகளின் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தடையாகவும்,100நாள் வேலைத்திட்டத்திற்கு வேலையாட்கள் செல்ல முடியாத நிலையில் பெரும் இடையூறாகவும் இருக்கின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்து பொதுமக்கள் ஒன்றுகூடி ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டனர்கள். ஊராட்சிமன்றதலைவர் முறையாக […]

மதுரையில் தண்டவாளத்தின் குறுக்கிட்ட பசு மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க ரயில் என்ஜினை நிறுத்திய ஓட்டுனர் கீழே இறங்கி சென்று மாட்டை அப்புறப்படுத்தி விட்டு பின்னர் ரயிலை ஓட்டி சென்றார். மதுரை போடிநாயக்கனுர் இரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில் அவ்வப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. காலை வழக்கம்போல் மதுரையில் இருந்து தேனி நோக்கி சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்தது. கண்காணிப்பு ரயில்வே கேட் அருகே பசுமாடு ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. இதனை […]

மதுரை நேரு நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மாநகராட்சியில் சிவக்குமார், சரவணன், லக்ஷ்மணன் ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் மதுரை நேதாஜி நகரில் கழிவு நீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க வந்துள்ளனர். அப்போது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லக்ஷ்மணன், சரவணன் ஆகிய 3 பேரும் […]

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆற்றில் இறங்க கூடாது என விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறிய முண்டியடித்து பெரும்பாலானோர் வைகை ஆற்றில் இறங்கினர். அப்பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 2 பக்தர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து […]

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் அதிவேகமாக சென்ற சரக்கு வேன் தாறுமாறாக சாலையில் திரும்பியது. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மீதும் அடுத்தடுத்து மோதி நிற்காமல் சென்றது. கடந்த 10ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் பள்ளிக்கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை சேதப்படுத்தி இருக்கும் சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரிமேடு அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு காவலாளி இல்லாததை அறிந்து நேற்று இரவு புகுந்த மர்ம கும்பல் வகுப்பறையில் இருந்த மின்விசிறிகளை சேதப்படுத்திய தோடு பிரஜோக்டர், சிபியு, லேப்டாப், மோடம் உள்ளிட்ட விலை உயர்ந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இரவு நேரத்தில் பள்ளியில் இருந்து சத்தம் வந்ததை அறிந்த […]

மதுரையில் மகளின் திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் அமிர்தா. இவருக்கும் பாலகுமாரன் என்பவருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு வந்த மொய் பணம் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க இருப்பதாக மணப்பெண்ணின் தந்தை கூறியுள்ளார். மணப்பெண் குடும்பத்தினர் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை […]