மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. பாரம்பரியமாக, கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் ஏற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், தீபத்தூணில் (மலை உச்சியில் உள்ள ஒரு தூண்) தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். […]
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் பேசப்பட்ட அரசியல் திராவிடம். ஆரியம் அல்லது பார்ப்பனியம் என்ற கருத்துகளுக்கு எதிராக ஆரியர் அல்லாத அல்லது பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் பேசிய அரசியலைத்தான் இங்கே திராவிட அரசியல் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை விமர்சிப்பது சங்பரிபவர்களின் ஒரு நிலைப்பாடு, திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரு செயல் திட்டம். அது ஆரியர்களுக்கு எதிரானது என்பதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல […]
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது “குற்றம் குற்றமே” இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். பணிக்கு வரும் தொழிலாளர்களை அவமதிப்பது, மரியாதை குறைவாக பேசுவது போன்ற அடாவடிகளை செய்து வந்த சுகன்யா, திட்டத்தில் பணியாளர்களை தேர்வு செய்வது, ஊதியம் தருவதிலும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து வந்ததாக பயனாளிகள் நம்மிடம் கண்ணீரோடு கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தோம். “குற்றம் குற்றமே” இதழில் வெளியான […]
கோவை, மதுரை இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் சேவைக்கான இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். அதில், […]
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி பயன்படுத்துவதாக கண்காணிப்பாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் உத்தரவுபடி, நேற்றுமுன்தினம் காவலர்கள் சோதனையிட்டனர். ‘ரிமாண்ட் செல்’ ஒன்றில் கைதி செல்வபாண்டி என்பவர், கழிவறையில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டு, பேட்டரியுடன் கூடிய அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சக தண்டனை கைதிகள் முத்திருள், குமார் ஆகியோர் செல்வபாண்டியிடம் கொடுத்து […]
சபரிமலை சீசன் தொடங்கவுள்ள நிலையில் தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களின் பயண வசதிக்காக மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சபரிமலையில் இவ்வாண்டிற்கான மண்டல பூஜை நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. மகரவிளக்கு பூஜை 2026 ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பக்தர்களின் ஏராளமான வருகையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, நவம்பர் 20 […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரை நகரத்தில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், பசும்பொன் குருபூஜை விழா மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்ச்சிகளின் காரணமாக ஏற்படும் போக்குவரத்து சிரமங்களை குறைக்கவும் நகரப் போக்குவரத்து போலீசார் சில தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளனர். பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வழக்கமான வழித்தடங்களின் வழியாகவே செல்வது தொடர்ந்தாலும், சில முக்கிய இடங்களில் மாற்று வழிகள் வழங்கப்பட்டுள்ளன. எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் – எம்.எம். விடுதி சந்திப்பில் […]






