
சிவகங்கையில் +1 மாணவியை ஆசிரியரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியரான ஆரோக்கியதாஸ், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே டியூஷன் எடுத்து வருகிறார். அவரிடம் பொதுத்தேர்வுக்காக படிக்க வந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரில், ஆரோக்கியதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தாய், தந்தை என இருவரும் தினமும் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், சிறுமியின் வீட்டிற்கு தண்ணீர் கேன் போடச் செல்வது போன்று சென்று, […]

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜாமீன் கோரிய மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு மே 21-ம் தேதி மத போதகர் ஜான் […]

கூட்டு பாலியல் வன்கொடுமையின்போது ஒருவர் மட்டுமே ரேப் செய்தாலும், அனைவரும் பொறுப்பாளிகளே என sc தீர்ப்பளித்துள்ளது. நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தான் உதவி மட்டுமே செய்ததால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென நபர் ஒருவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த கோர்ட், ஒருவர் ரேப் செய்தாலும், கூட்டாளிகளுக்கும் பொறுப்புண்டு, தண்டனையும் சமமாக அளிக்கப்படும் என Sc உத்தரவிட்டது.

ம.பி.யில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை (ரேப்) செய்துள்ளான். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது, திடீரெனப் புகுந்து அந்த மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்போர் ஓடி வந்து, அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் அவனை போலீஸ் கைது செய்தது.

பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்தி 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் இரண்டு பள்ளி மாணவிகளை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அன்றைய இரவே, இரண்டு மாணவிகளும் சோர்வான நிலையில், வீடு திரும்பினர். இந்நிலையில், இரண்டு மாணவிகளிடமும் காவல்துறையினர் தனித்தனியாக ரகசிய விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. அதாவது, மீன் வியாபாரியான புஷ்பராஜ் மற்றும் […]

கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர். உள்ளூர் போலீசார் வழக்கை மூடி மறைக்க முயன்ற நிலையில், விஜயநகர் எஸ்.பி. தலையிட்டதால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை நிர்பயாக்களுக்கு இந்த கொடூரம் நடக்கும்? என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் பேராசிரியர் மதன் குமார் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி உட்பட 3 பேரிடம் பேராசிரியர் மதன் குமார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக […]