
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-மதுரை இடையே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே 12ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே மே 8ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மே 9ஆம் தேதி தேரோட்ட வைபவமும் நடைபெற்றது. இந்த நிலையில், மதுரை சித்திரை விழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக சிறப்பு ரயில் இயக்கம்.சித்திரை […]

திருச்சி பொன்மலை நார்த்” டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் சீதாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீகற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால பைரவர், ஸ்ரீஆனந்த சாய்பாபா கோயிலில் உலக நன்மைக்காக மஹா சண்டியாகம் விழா இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று (6-ந் தேதி) மங்கள வாத்தியம், மஹா கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம், லெட்சுமி ஹோமம் , மங்கள […]

அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தொடக்கி வைத்தார். திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையம் ஸ்ரீ கந்தன் வள்ளி கும்மி குழுவின் அரங்கேற்ற விழா அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம் ரோடு, காயத்ரி நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகில் உள்ள வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு செளந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கந்தசாமி, பாலசுப்பிரமணியம், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்டபாணி அனைவரையும் வரவேற்றார். ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு […]

தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சாமி புறப்பாடும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் […]

திருப்பூர் மாவட்டம் கருவலூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14ம் தேதி) 15 வேலம்பாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.பி.மணி தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கிநார். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர் அர்ஜுனன், முன்னாள் பகுதி துணைச் செயலாளர் கே.நடராஜ், 24.வது வார்டு பிரதிநிதி ஆர். ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் நெசவாளர் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா கடந்த 12ம் தேதி சனிக்கிழமை மங்கல இசை, ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ மாதவனேஸ்வரர் கோவிலில் இருந்து பம்பை, மேள வாத்தியங்களுடன் […]

நேற்று ராமநவமி கொண்டாட்டத்தின்போது மூவர், சர்ச்சையை கிளப்பும் வகையில் கொண்டாடி இருக்கின்றனர். உ.பி. பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள தர்காவின் மீது ஏறி நின்றவர்கள், கையில் காவி கொடியுடன் கொண்டாடினார். அவர்கள் கொடியை அசைக்க, கீழே நின்றிருந்தவர்கள் உற்சாகமாக கோஷங்களை எழுப்பி கோஷமிட்டனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள் என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். இதனிடையே பாங்காக்கில் உள்ள பிரபல புத்த மடாலயமான வாட் ஃபோவுக்கு பிரதமர் சென்றார் சென்றார். அங்கு மெழுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த அவர், புத்த மதகுரு காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வின் போது தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவும் உடன் இருந்தார்.

முருக பக்தர்களின் 7ம் படை வீடாக விளங்கும் மருதமலை முருகன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருமறை பாராயணம், வேள்வி பூஜையை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் குடமுழுக்கு விழாவை பார்வையிடுவதற்கு ஏதுவாக 10 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருதமலை அடிவாரம் முதல் முருகன் கோயில் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]