
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது .ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடி அடுத்து கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பரபவனி விமர்சியாக நடந்ததுது . இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை […]

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி போலீசார் சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களின் வாகனங்கள் மட்டும் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரைகளையும் விலக்கி நடைபெறும் ஜோதி தரிசனம் தொடங்கியுள்ளது. தமிழ்க் கடவுளான முருகனுக்கு நடத்தப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபடுவர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ஆம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் மற்றும் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தைப்பூசத் […]

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர். டைரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கடற்கரையில் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக சென்னை ஐஐடி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக கோயில் முன்பு உலக கரையில் அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியேறுவதால் கடலில் நீராட பக்தர்களுக்கு உடலில் காயங்கள் […]

மகா கும்பமேளாவின் 2வது நாளில் நதிக்கரையில் மணல் போதாது என்ற அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 13 அகாதங்களைச் சேர்ந்த துறவிகள் புனித நீராடுகிறார்கள். பக்தர்கள் கூட்டத்தின் ஆரவாரம், பஜனைகள் என அனைவரும் வாகனங்களில் பேரணியாக அங்கு சென்றடைகின்றனர். சுவாமி கைலாசானந்த கிரி, ஆனந்த அகாரா சுவாமி சுரேந்திரகிரி மகாராஜ் ஆகியோர் இன்று மகா கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள் மிகு ஆவுடைநாயகி அம்மன் உடனமர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் சனி மஹா பிரதோசம், திருக்கல்யாணம், மஹோற்சவ விழாவை தொடர்ந்து நடராஜ பெருமான் இன்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார், முன்னதாக இன்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. 21 க்கும் அதிகமான மூலிகை திரவியங்களை கொண்டு சுவாமிக்கு அபிசேகம் செய்தார்கள்,அபிசேகம் முடிந்த பின்பு அலங்காரம் செய்து சிவனடியார்கள் வேத வாத்தியம் முழங்க […]

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெறும் நிலையில், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. ஜன.15 ஆம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி; ஜன.16 ஆம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடைபெறும் எனவும் ஜன.20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மகா கும்பமேளா. உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சாதுக்களும், துறவிகளும், அகோரிகளும் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டு, கழுத்தில் மண்டை […]