12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் தந்ததும், இது அமலுக்கு வரும்.   தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் மாணாக்கர்கள் மட்டும் கால்குலேட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிபிஎஸ்இயின் இந்த முடிவால் மாணவர்கள் அனைவரும் பயனடைவர் எனக் கூறப்படுகிறது.

Read More

தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.   இதுகுறித்து தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.   அதன்படி அரசு, அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 […]

Read More

புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி இன்று (மார்ச் 10) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டத்தை ஒட்டி வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறையாகும். அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதியும் தொடங்குகிறது.   12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேரும் எழுதுகின்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு […]

Read More

பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என TN அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பகுத்தறிவாதிகள், நாத்திகர்களின் சங்கங்களும்கூட சாதிப் பெயரை தாங்கி இருப்பதாகவும், சில அரசுப் பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.   மேலும், கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர் பயன்படுத்துவது குறித்து அரசு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Read More

அய்யா வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்பட்ட தினம் வைகுண்ட அவதார தினமாக மார்ச் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் அன்று மூடப்பட்டிருக்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Read More

அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் மாநில அளவில் சிறந்த படைப்பாக தேர்வு ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவிகளுக்கு குழந்தை விஞ்ஞானி பட்டம்..!   திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவிகள் இனியாஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் பிரித்திவிராஜ் தலைமையில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் அறிவியல் ஆய்வுக்கட்டுரை தயாரித்தனர்.   அதனை சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,கணித அறிவியல் நிறுவனம், அகில […]

Read More

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம்  அடுத்துள்ள தொங்குட்டிபாளையத்தில் அலகுமலை  ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக  தொடங்கியது.   விழாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  கேலரி, வாடிவாசல், காயம் பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்யும் அறைகள், காளைகள் பாதுகாப்பாக  வெளியேறும் பகுதிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 16ஆம் தேதி மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது.   ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல விஐபிகளின் காளைகள் […]

Read More

அம்மாபாளையம் நகராட்சி  நடுநிலைப்பள்ளி, கிரீன் சைக்கிள் சொல்யூஷன் சார்பில் மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1350 கிலோ பேப்பர்,பிளாஸ்டிக் சேகரிப்பு ..!   திருப்பூர்,திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி  நடுநிலைப்பள்ளி மற்றும்  கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனம் அவினாசி கிளை  சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் 2 ஆம் ஆண்டாக மறுசுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.   […]

Read More
1 2 3 165