
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது. இந்த பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், மருத்துவமனைகளிலும், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்ளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 5,755 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 1,806 பேரும், குஜராத்தில் 717 பேரும், டெல்லியில் 665 பேரும், மேற்கு வங்கத்தில் 622 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழ்நாட்டில் […]

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தருகின்றனர். அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை உட்பட […]

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத் மற்றும் டெல்லியில் புதிதாக தலா 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்துக்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் 63 பேருக்கும், மேற்குவங்கத்தில் 60 பேருக்கும் தொற்று […]

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றும் தேர்ச்சியடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்.இதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் […]

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சஃபியுல்லா, ராமலிங்கம், […]

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை வீட்டிலேயே தனிமைப்படுத்தும்படி டாக்டர்கள் குடும்பத்தினரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி வீட்டில் உள்ள அறையில் தனியே வைத்து சிறுவனின் உடல்நலத்தை பெற்றோர் கவனித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை தவெக தலைவர் விஜய், நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கிவருகிறார். அந்த வகையில் மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டும் அந்நிகழ்ச்சியை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு, அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களை நேரில் […]

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மொத்தமாக 257 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கேரளாவில் 95 […]