
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள தொங்குட்டிபாளையத்தில் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. விழாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கேலரி, வாடிவாசல், காயம் பட்டவர்களை மீட்டு முதலுதவி செய்யும் அறைகள், காளைகள் பாதுகாப்பாக வெளியேறும் பகுதிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 16ஆம் தேதி மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல விஐபிகளின் காளைகள் […]

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கிரீன் சைக்கிள் சொல்யூஷன் சார்பில் மறுசுழற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1350 கிலோ பேப்பர்,பிளாஸ்டிக் சேகரிப்பு ..! திருப்பூர்,திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கிரீன் சைக்கிள் சொல்யூஷன் நிறுவனம் அவினாசி கிளை சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் 2 ஆம் ஆண்டாக மறுசுழற்சி மற்றும் நில பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். […]

கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு 25 வயது இளைஞர் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் ஒன்றில் பெற்றோர் திருமணம் செய்தது வைத்துள்ளனர். தாலியுடன் மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகள் நல அலுவலகம் சமூக நலத்துறை […]

கடலூரில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதி கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி பள்ளிக்கு செல்லாத நிலையில் மாலை விடுதியில் தேடிய பொழுது கழிவறையில் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. விடுதியில் உணவு சரியில்லை என்றும் கழிவறை சரியில்லை என்றும் மாணவி புகார் தெரிவித்து வந்ததாகவும் அதற்காக பள்ளி நிர்வாகம் அவர் மீது கோபத்தில் இருந்ததாகவும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து பல்ல கவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காத ரத்தம் தேவைபடுகிறது என்ற வாட்ச் அப்புகளில் தகவல் பரவியது. இதனையறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி பொருப்பாளர் சாஜித் அஹமது அவர்கள் தலைமையில் தமுமுகவின் மருத்துவ சேவை குழு தற்போது முதல் கட்டமாக 32 யூனிட் இரத்தமும், 2 வது கட்டமாக […]

அப்துல் கலாம் குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும்.கே.ஜி. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. பக்தவச்சலம் அறிவுரை..! திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவுச்சுடர் கலையரங்கம் திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய தொகுப்பான ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு திருப்பூர் (தொடக்க கல்வி) மாவட்ட கல்வி அலுவலர் […]

யானைகள் சென்ற வலசை பாதை தான். தற்போது தார் சாலையாக மாறி உள்ளது . இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜலாலுதீன் பேச்சு..! திருப்பூர், திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் ஏ. வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டம் சார்பில் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். […]

கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என 805 குழுக்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் UDISE தளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், பிரிவு வாரியாக மாணவர்களின் பொது விவரங்கள், சேர்க்கை, அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், ஆதார் எண் என அனைத்து விவரங்களும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.