
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. 01.05.2023க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் 24 முறை சூடான கம்பியால் சூடு வைத்ததில் அந்த குழந்தை உயிரிழந்தது. இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கடுமையான நடவடிக்கை […]

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் நோரா கொரோனா வைரஸ் பாதிப்பால் 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வில் மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறப்படும் நிலையில் பள்ளியின் கிணறுகளில் குளோரினேஷன் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யவேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட உதவி கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் நேரில் சென்று விசாரணை […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலின் பொழுது சக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிளஸ் டூ மாணவன் கல்லால் தாக்க முயற்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. புதுப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. […]

மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மழை எதிரொலியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் ஊழியர்கள் தொற்றுநோய் இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உணவு நச்சுத்தன்மைக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கேரளா அரசு இன்று முதல் சுகாதார அட்டை திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதன்படி கேரளாவில் உள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சமையல் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு தொற்று நோய், வெட்டு காயங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்க […]

ராசிபுரம் அருகே இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முத்து என்பவருக்கும் அவரது உறவினரான ஜெயக்குமாருக்கும் சொத்து தகராறு தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் முத்து வீட்டிற்கு செல்லும் தனியார் பாதையை ஜெயக்குமார் கற்களைக் கொட்டி மறுத்ததாக கூறப்படுகிறது. 75 வயதான முத்துவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வீட்டில் தனியாக இருந்த அவரது பேத்தி 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். வழியை மறைத்து போடப்பட்டிருந்த […]

11ஆம் வகுப்பு பள்ளி சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கு சிறுமியை இறையாக்கிய காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உட்பட 3 பேரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் காதலன் கார்த்திக் மற்றும் அவனது நண்பர்கள் ஆதி, ஹரிஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் போக்ஸோ […]