![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2024/10/9-41.jpg)
குற்றம் குற்றமே செய்தியின் எதிரொலியால் நீலகிரி மாவட்டம் மசனகுடி அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் அண்மையில் குற்றம் குற்றமே செய்தியில் வந்துள்ளது. அதை கவனித்த வனத்துறையினர் உடனடியாக வாழைத்தோட்டம் பகுதியில் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டார்கள். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் குற்றமே செய்தியாளரை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர்களை மிகவும் நன்றி தெரிவித்து பாராட்டி உள்ளார்கள்.
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2024/08/fguijfg.jpg)
திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம், 41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம், பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்டோர் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள். இந்த குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் ஜோதி அங்கமுத்து மகன் சிவபிரகாஷ் என்பவர் “ஓஷோ டிரேட்ஸ்” என்ற நிறுவனத்தை 5 வருடங்களாக நடத்தி வந்துள்ளார். அதில் அசிட்டிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, […]
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2024/01/vgjfgjf.jpg)
திருப்பூரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில், எஸ்பி ஆக இருந்த சாமிநாதனை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளதால், இனி சட்ட விரோதச் செயல்கள் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் மாநகர் சட்டம் ஒழுங்கு தடுப்பு காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் […]
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2023/08/cpi-page-001-scaled.jpg)
குற்றம் குற்றமே செய்தி எதிரொலி – சாக்கடை அடைப்புகளுக்கு பிறந்தது வழி! துரிதமாக செயல்பட்ட துணை மேயர்…. துணிச்சலுடன் மற்ற பணிகளும் முடிப்பாரா?
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2023/06/fgf.jpg)
வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து, காவல்துறையினருக்கே களங்கம் ஏற்படுத்தி வரும் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சில போலீசாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது காவல்துறை. வேலியே பயிரை மேயும் கதையாக லஞ்சம், முறைகேடு, குற்றங்களைத் தடுக்க […]
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2023/06/BREAKING-page-001.jpg)
எதிர்பார்த்தது போலவே, பலமணி நேர கிடுக்கிப்பிடி சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று செந்தில் பாலாஜி கதற, அரசின் செல்வாக்கு மிக்க அமைச்சரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற காட்சி, தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார். முதலில் ஐடி… இப்போது ஈ.டி… தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை என்று […]
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2023/05/fsdhdfh.jpg)
கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார். பதவியில் இருந்து விடைபெறும் முன்பு கலெக்டர் செய்த தரமான சம்பவத்தால் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநராக இருந்து வந்தவர் கே.எல்.கே. வள்ளல். இவரது அலுவலகம், கலெக்டர் வளாகத்தில் 6-வது தளத்தில் உள்ளது. திருப்பூர் […]
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2022/07/zddasfasd.jpg)
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும், அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்கூட்டியே போலீசார் கண்டறித்தவறியதால், தமிழக அரசுக்கு பெரும் சங்கடம் உண்டாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகிறது. இதன் தாளாளராக இருப்பவர், […]
![](https://www.kuttramkuttrame.com/wp-content/uploads/2022/06/SFsadf.jpg)
போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நகரை ஒட்டிய புறநகர்ப்பகுதிகளாக இருப்பதால், சமூக விரோதச் செயல்களும், சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, காவல்துறையினரின் கண்காணிப்பை இன்னும் பலப்படுத்த […]