
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும், அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்கூட்டியே போலீசார் கண்டறித்தவறியதால், தமிழக அரசுக்கு பெரும் சங்கடம் உண்டாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகிறது. இதன் தாளாளராக இருப்பவர், […]

போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நகரை ஒட்டிய புறநகர்ப்பகுதிகளாக இருப்பதால், சமூக விரோதச் செயல்களும், சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, காவல்துறையினரின் கண்காணிப்பை இன்னும் பலப்படுத்த […]

பசுமை இல்ல பயனாளிகளிடம், துறையூர் பி.டி.ஓ. மணிவேல் லஞ்சம் வாங்கியதை, முதன்முறையாக வீடியோவுடன் “குற்றம் குற்றமே” இணையதளம் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்திய நிலையில், அவரை தமிழக அரசு தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (பி.டி.ஓ) இருப்பவர் மணிவேல். இவரை, பச்சமலை அருகே உள்ள வண்ணாடு ஊராட்சியை சேர்ந்த பசுமை வீடு திட்ட பயனாளிகள் சிலர், மே 16ம் தேதி சந்தித்தனர். அப்போது பயனாளிகளுக்கு […]

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டதை, “குற்றம் குற்றமே” இணையதளம் சுட்டிக்காட்டிய நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக அதை சரி செய்திருப்பது, பலரின் பாராட்டை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 91 தேர்வு மையங்களில், தமிழகத்தில் மிகப்பெரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியான திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இந்த […]

மோகன் கார்த்திக் குறித்த “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை சகட்டுமேனிக்கு விமர்சித்துவிட்டு, பின்னர் பயந்து போய் பதிவை நீக்கிவிட்ட கோழைகளுக்கு, பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். நமது “குற்றம் குற்றமே” வார இதழ் மற்றும் இணையதளம், என்றைக்கும் நீதியின் பக்கம், நேர்மையின் பக்கமே நின்று வருகிறது. விருப்பு வெறுப்பின்றி, குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளை […]

திருமுருகன்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தலைவர் தேர்தலில் திமுகவினரை தூண்டிவிட்டு, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் குளிர் காய்வதாக, கம்யூனிஸ்ட் கட்சியினர் குமுறுகின்றனர். இங்குள்ள சூழல் திமுக தலைமையும் அவசர முடிவெடுப்பதாக, திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி, பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறிய பின்னர், முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. திருமுருகன்பூண்டி நகராட்சியில், மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க. […]

திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் குறுக்கிடுவதை ஏற்க முடியாது என்று , சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் பிப். 17ம் தேதி இன்று மாலையுடன் நிறைவடைவதால், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனிடையே, திருப்பூரில் […]

‘குற்றம் குற்றமே’ இதழ் செய்தி எதிரொலியாக, அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தியதோடு அவர்களின் கருத்தை கேட்டறிந்தார். அவரிடம் ஏற்பட்டுள்ள இந்த மனமாற்றம், அதிமுகவினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது. வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அவிநாசி (தனி) தொகுதியில், அதிமுக சார்பில் மீண்டும் சபாநாயகர் ப.தனபால் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து நேரடியாக திமுக போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆதிதமிழர் பேரவை கட்சியின் அதியமான் […]

கோவை to தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் பயணிப்பது பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவம் தான். டிரைவர்கள் பாட்டிலும் கையுமாக புல் மப்பில் பேருந்தை இயக்குவதால் திக்.. திக் ..மன நிலையில் தான் உயிரை கையில் பிடித்தபடி பதற்றத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி பார்சல் அனுப்புபவர்கள் படும் பாடும் சொல்லி மாளாது. உரிய இடத்தில் பார்சலை கொண்டு சேர்க்காமல் அலைக்கழிப்பதும், தேவகோட்டை சென்றவுடன் பேருந்தை பார்சல்களுடன் ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் […]