மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவிலும் நாட்டிற்கு வெளியே 14 இடங்களிலும் ஆஃப்லைன் முறையிலும் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி […]
திருவள்ளூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்து பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவிய சம்பவம் நிகழ்ந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அத்திமான் ஜேரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வனஜா. மூன்றாவது பிரசவத்திற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உதவி செய்த விஜயகுமார் […]
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நடப்பாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வுக்கு இதுவரை சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஆன்லைனில் ஓடிபி பெற முடியாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மாணவர்கள் […]
கோவையில் வயிற்று வலி ஏற்பட்டு பள்ளி சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதராஜத்தை புரத்தை சேர்ந்த ராஜாமணி – புவனேஸ்வரி தம்பதியினரின் 6 வயது மகள் ரியா. மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி இரவு ரியாஷினி வயிற்றுவலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறினார். பின் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரியாஷினிக்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தீவிர […]
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 43,051 மையங்கள் மூலம் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உ ள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என இன்று 43,051 […]
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிதான, அட்ரீனல் சுரப்பி கட்டிகளை அகற்றிய தனித்துவமான லேப்ராஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை, எதிர்காலத்தில் மருந்துகளை பயன்படுத்தும் அவசியத்தை நீக்கி சாதனை.. 33 வயதான ஒரு பெண் நோயாளிக்கு அரிதான Pheochromocytoma என அழைக்கப்படும் புற்றுக்கட்டிகள் அவரது இரு அட்ரீனல் சுரப்பிகளிலும் உருவாகியிருந்தன. ‘partial adrenalectomy’ என்ற அழைக்கப்படும் இந்த அறுவைசிகிச்சை, அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டை தக்கவைத்துக் கொள்கிறது. அத்துடன், அறுவைசிகிச்சைக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் மருந்துகளை சார்ந்திருப்பதை அவசியமற்றதாக ஆக்குகிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக […]
நோயாளிகளுக்கான மருந்துகள் குறித்த பரிந்துரை கடிதத்தில் மருத்துவர்கள் தெளிவாக எழுத வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து மருத்துவர்கள் எழுதும் பரிந்துரை கடிதத்தில் நோயாளிகளுக்கு புரியும் வகையில் தெளிவாகவும் கேப்பிட்டல் எழுத்தில் இருக்க வேண்டும் என மத்தியரசு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அனைவரும் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் […]
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஏற்ற சென்ற ஆட்டோ ஒன்று பள்ளத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனை முன் உள்ள அந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர். அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருத்துவமனையில் திருட வந்தவனை போலீசார் கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர். தற்பொழுது சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை போலீசார் கைது செய்தனர்.