டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி என்ற நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்ததாக சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் (46) ஆகிய 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்து […]
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை, புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு, […]
கொரோனா பெருந்தொற்றின்போது உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் கம்பீர் மற்றும் அவரின் அறக்கட்டளை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சித்த மருத்துவ மசோதா மீது சட்டப்பேரவை மாண்பைக் குறைக்கும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சட்ட முன்வடிவு, நிதிச்சட்ட முன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருவதால், பேரவையில் ஆய்வு செய்வதற்காக […]
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் சூழலில், டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு என்ன காரணம், பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதை விளக்க பார்க்கலாம். தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கூடவே டெங்கு பாதிப்பும் உயர்ந்திருக்கும் சூழலில், சென்னை, கோவை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது சுகாதாரத் துறை. இப்படி இருக்க, ஏடிஸ் வகை […]
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு http://tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய் 3ஆவது கட்டமாக நேற்று முன் தினம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்து கொண்டு இரவு 7 மணி அளவில் கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வந்தார். விஜயை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் மயங்கிய […]
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும். ‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் […]
கேரளாவில் மூளை திண்ணும் அமீபா நோய் பரவல் எதிரொலியாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த வைரஸ் பாதிப்பதால் 3 மாத ஆண் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒமசேரி பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் 3 மாத ஆண் குழந்தைக்கு கடந்த 28 நாட்களுக்கு முன்பு அமீபா பாதிப்பு உறுதி […]






