
வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் இவர்கள் படும் துயரம் ஏராளம். இவ்வாறு மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை பராமரிக்கும் மகள் மருத்துவத்துடன் பகிர்ந்த இரண்டு நிமிட வீடியோ இணையத்தில் வருகிறது. இதைப்பற்றி அந்த வீடியோவில் பேசிய மகள் என் தந்தையுடன் நான் பேசிக் கொண்டிருந்தாலும், நான் தான் இவரின் மகள் […]

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் 24 முறை சூடான கம்பியால் சூடு வைத்ததில் அந்த குழந்தை உயிரிழந்தது. இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கடுமையான நடவடிக்கை […]

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் நோரா கொரோனா வைரஸ் பாதிப்பால் 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வில் மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறப்படும் நிலையில் பள்ளியின் கிணறுகளில் குளோரினேஷன் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் தொற்றுநோய் இல்லை என்று சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உணவு நச்சுத்தன்மைக்காக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கேரளா அரசு இன்று முதல் சுகாதார அட்டை திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதன்படி கேரளாவில் உள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சமையல் நிறுவனங்கள் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்களுக்கு தொற்று நோய், வெட்டு காயங்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்க […]

ராசிபுரம் அருகே இடத் தகராறில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாததால் முதியவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முத்து என்பவருக்கும் அவரது உறவினரான ஜெயக்குமாருக்கும் சொத்து தகராறு தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் முத்து வீட்டிற்கு செல்லும் தனியார் பாதையை ஜெயக்குமார் கற்களைக் கொட்டி மறுத்ததாக கூறப்படுகிறது. 75 வயதான முத்துவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வீட்டில் தனியாக இருந்த அவரது பேத்தி 108 ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார். வழியை மறைத்து போடப்பட்டிருந்த […]

தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. ஆயுர்வேதா மருத்துவம் படித்து முடித்துள்ள ஷர்மிகா சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு பிரபலமாகினார். உடல்நலம் குறித்து தொடர்ந்து சித்த மருத்துவ குறிப்புகளை கூறி வந்த ஷர்மிகா மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.மேலும், சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக ஷர்மிகா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய […]

தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கிளியர் ஆர்டி வசதியுடன் கூடிய டொமோ தெரபி சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக புற்று நோய்க்கு கிளியர் ஆர் டி மற்றும் சின்கரனி வசதியுடன் கூடிய டொமோ தெரபி கதிர்வீச்சு சிகிச்சை மையம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் மற்றும் காமினி குருசங்கர் சிகிச்சை மையத்தினை […]

ஆந்திராவில் மூளைச்சாவடைந்தவர் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு ஆம்புலன்ஸில் மின்னல் வேகத்தில் பறந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதையடுத்து மூளை சாவடைந்தவரின் இதயம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. […]

டயர்களில் காற்றை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் திருடி சென்ற சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது. மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் காற்றை நிரப்புவதற்காக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக சைக்கிளில் வந்த இளைஞர் ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி சென்றார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரசு பேருந்தில் சென்று ஆம்புலன்ஸை மடக்கி இளைஞருக்கு தர்மடி கொடுக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சை திருடி சென்ற இளைஞர் பாலாஜி என்பது போலீஸாரின் […]