
டெங்கு காய்ச்சலை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் சரயு மாவட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டிகள் மழை நீர் தேங்காத வகையில் பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தினசரி காய்ச்சல் குறித்த விபரங்களை வட்டார […]

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 10.5 கோடி ரூபாய் அளித்து உதவியுள்ளார். டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்குள் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் திரட்டி உள்ளனர். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மாநில முதலமைச்சர் உதவி வழங்கியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு அரசின் ஆக்கர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தடையை மீறி கீழ்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய டானிக் பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன. காலாவதியாகிவிட்ட சுமார் 1000 டானிக் பாட்டில்கள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் அல்லது அதிகமாக இருக்கும் மருந்துகள் குறித்து தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை மருந்து கடைகளுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் டானிக்குகள் காலாவதியாகும் படி இரு ஏன் இருப்பு வைக்கப்பட்டது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரையில் தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Metabolic Encephalopathy மற்றும் Atypical Autoimmune parkinsonism/encephalitis நோய் பாதிப்பிருந்த 69 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியிருக்கிறது. நீரிழிவு, சிறுநீரக நோய், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியமாக இருந்த கரோனரி தமனி நோய், வீக்கமடைந்த புராஸ்டேட் சுரப்பி என பல்வேறு நோய் பாதிப்ப வரலாறை கொண்டிருந்த இந்நோயாளி, மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தார். […]

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உடல் பரிசோதனைகளுக்கு பின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பொதுமக்களை சந்தித்த பொழுது அமைச்சருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனையும் இதயத்தில் அடைப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அலுவலகத்தில் புகார் சென்றது. மருத்துவத்துறை அதிகாரிகள் தனலட்சுமி என்பவரின் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு விலக்கு பெரும் முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வந்தாலும் அதன் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அவை முட்டுக்கட்டையாக இருந்து வருவதாகவும், மாணவர்களின் மரணங்கள் ஆளுநரையும், மத்திய அரசையும் துளியும் பாதிக்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதிகாரப் போட்டி நடந்துகொள்ளும் மத்திய அரசிடம் இல்லாத அதிகாரம் இருப்பது போல் செயல்பட்டு வரும் […]