
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும் கொரோனா வழி முறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தமிழ்நாடு பொது மருத்துவ […]

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக விமான நிலையம் சென்றார். பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறுமாத கால குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கொரொனா தடுப்பூசி அவசர காலத்தில் செலுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் பைசல் மற்றும் மாடனா நிறுவனங்கள் 6 மாத குழந்தைகள் முதல் ஐந்து வயது சிறுவர்கள் வரை கொரொனா எதிர்ப்பாற்றலை பெறுவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர். தற்பொழுது அவற்றை அந்த வயது பிரிவினருக்கு செலுத்துவதற்கு உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என பாரம்பரிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்துகளின் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டதாக மாறுபட்ட நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா தெரிவித்துள்ளார். விரைவில் தரவுகளை ஆய்வு செய்து முடித்த பின்னர் அடுத்த மாதம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரிடம் தரவுகளை சமர்ப்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதன் பின்னர் அனுமதி கிடைத்தால் உலகிலேயே பரிசோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்ட மூக்கின் வழி செலுத்தப்படும் முதல் […]

16 வயது சிறுமி கரு முட்டை விற்பனை குறித்து மருத்துவர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கருமுட்டையை தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்த வழக்கில் சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகும்படி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அது காவல்துறை சார்பில் சம்மன் […]

சென்னை தேனாம்பேட்டை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் சென்னையில் 5 ஆயிரம் ஆர்டிபிசிஆர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரொனா மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தலைமையில் தொற்று பரவலை எதிர்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் தமிழகத்தில் நேற்று 332 பேருக்கு தொற்று பரவியுள்ள […]

இங்கிலாந்தில் மேலும் 14 பேருக்கு குரங்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்பொழுது பல உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது என உலக சுகாதார […]

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தனது நான்கு வயதே ஆன உறவுக்கார குழந்தையின் சடலத்தை ஒருவர் தோளில் தூக்கிச் சென்று அவலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தின் வடபகுதியில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தன் உறவுக்கார குழந்தையின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் வீடு வரை அந்த நபர் தனது தோளிலேயே சடலத்தை சுமந்து சென்றுள்ளார். சத்தர்பூர் தலைமை மருத்துவ அதிகாரி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் இது […]

மேம்பட்ட மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் வலிப்புத்தாக்க நோயாளிக்கு வலிப்பு இல்லாத புது வாழ்க்கையை வழங்கியுள்ளது மீனாட்சி மிஷன் மருத்துவமனை. தென் தமிழ்நாட்டில் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Vagal Nerve Stimulation (VNS) என்ற தனித்துவமான மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. வலிப்பு தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் தனித்துவமான மூளை நரம்பியல் அறுவைசிகிச்சையான இந்த VNS, மதுரையைச் சேர்ந்த 33 வயதான […]