தனியார் பல்மருத்துவக் கல்லூரி ஒன்று மாணவரிடமிருந்து விதிகளுக்குப் புறம்பாக வசூலித்த 6 லட்ச ரூபாய் கூடுதல் கட்டணத்தை அவரிடமே திரும்ப வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ. பிரியதர்ஷினி என்ற மாணவி, மாதா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி இந்தத் தீர்ப்பினை வழங்கினார். 2015-2024 […]
பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக ஹாஃப்பாயிலாக சாப்பிட வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருந்தார். இது முட்டையை அவர் குறிப்பிடுவதாகப் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கடந்த வாரத்தில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டு சில பறவைகள் இறந்தன. இந்தக் காய்ச்சல் மக்களுக்கும் ஏற்படக்கூடும் என்பதால், அதுதொடர்பான சில விழிப்புணர்வை பொது சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி ப்ளூ போன்ற அறிகுறிகள் (II) – இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் […]
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத 72 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறுவது என மொத்தமாக 75 மருத்துவக் கல்லாரிகள் உள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்திய அளவில் உயர்கல்வி விகிதம் 24.8% ஆக உள்ளது; தமிழ்நாட்டில் 2 மடங்கு அதிகமாக 47% ஆக உள்ளது என தெரிவித்தார்.
தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் வைத்திருக்கிறது திமுக அரசு. உடனடியாக, தமிழகம் […]
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி என்ற நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்ததாக சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் (46) ஆகிய 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்து […]
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை, புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு, […]
கொரோனா பெருந்தொற்றின்போது உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் கம்பீர் மற்றும் அவரின் அறக்கட்டளை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சித்த மருத்துவ மசோதா மீது சட்டப்பேரவை மாண்பைக் குறைக்கும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சட்ட முன்வடிவு, நிதிச்சட்ட முன்வடிவு என்கிற வகைப்பாட்டில் வருவதால், பேரவையில் ஆய்வு செய்வதற்காக […]






