
காஞ்சிபுரம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜம்பேட்டை அருகே தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்துள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

வேலூரில் நகை பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் துறை பாண்டியை சேர்ந்த லோகேஷ் என்பவர் சுமார் 15 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக எடுத்துச் சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லோகேஷ் வைத்திருந்த நகை பையை பறித்து சென்றனர். அவர்கள் சென்று இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய பொழுது வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு இருவரும் தப்பிய நிலையில் சிசிடிவி […]

சென்னையில் நகை திருடு போனதாக கூறப்பட்ட புகாரில் சுமார் 4 மணி நேரமாக விசாரணை நடத்திய போலீசார் பீரோவின் மற்றொரு பகுதியில் இருந்து நகையை மீட்டனர். சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த தனியார் ஐடி ஊழியர் நிறுவனரான சரவணன் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 130 சவரன் நகை கொள்ளை போனதாக புகார் அளித்தார். இதையடுத்து உயர் அதிகாரிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உடன் விசாரணை […]

சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் எட்டு சவரன் நகைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தேவி என்பவரின் வீட்டுக்கு கடந்த 19 ஆம் தேதி வீடு கேட்பது போல் சென்ற இரு நபர்கள் அவரை அறைக்குள் தள்ளிவிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துக்கொண்டு காலில் விழுந்து பண தேவைக்காக கொள்ளையடித்ததாக கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு தப்பி உள்ளனர். […]

காவல்துறையிடம் பிடிபடாமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என வீடியோ பார்த்து விட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே அந்த நபர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். ராமாபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்பொழுது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் இரண்டு வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 38 லட்சம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்ற காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயும், மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஏ டி எம் மையத்திலும் ஒரே மாதிரி கொள்ளை நடந்திருப்பதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என […]

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி கூலி தொழிலாளி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். புழுதி குட்டை கிராமத்தை சேர்ந்த பழனியம்மாளின் வீட்டிற்கு வந்த நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ் என்ற ஜோதிடர் பூஜை அறையில் புதையல் இருப்பதாகவும் சிறப்பு பூஜை செய்து புதையலை எடுத்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பழனியம்மாள் வீட்டிலிருந்து நகைகளை அடமானம் வைத்து ஜோதிடர் செல்வராஜ் கேட்ட ஒரு […]

முகநூலில் பழகி திருமணம் செய்து தன்னிடம் 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 37 சவர நகைகளை பெற்று மோசடி செய்ததாக ராமநாதபுரத்தில் மனைவியின் மீது வனச்சரகர் புகார் அளித்துள்ளார். கீழக்கரையில் வனச்சரகராக பணிபுரிந்து வரும் முத்துராமன் என்பவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நசீமா பர்வீன் என்ற பெண்ணுடன் முகநூல் மூலம் பழகி வந்தார். இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் நசீமாவிற்காக லட்ச கணக்கில் நகை, கார் உள்ளிட்ட […]

திருப்பூரில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வந்த குமார் என்பவர் அந்த பகுதி மக்களிடம் மாதம் மற்றும் வார தவணை அடிப்படையில் சீட்டு நடத்தி வந்தார். இதனை நம்பி 20க்கும் மேற்பட்டவர்கள் மாதம் மற்றும் வாரத் தவணையில் சீட்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் வாரம் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணையாக, இரண்டு கோடி […]