
தொழுகைக்கு சென்றவரின் இரு சக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்லும் காட்சிகள் வருகிறது. சிக்கந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்சியடைந்தார். அங்குள்ள தர்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த பொழுது ஒருவர் கள்ளச்சாவியை போட்டு திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இது குறித்து நாகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவியில் […]

சென்னையில் இரவு நேரத்தில் காதலியுடன் காதலர் பீச்சில் இருந்த ஐடி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பனையூர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், விஜய் என்ற இளைஞர்கள் மது போதையில் காதலர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் பீர் பாட்டிலால் அடித்து விட்டு ஜிபே மூலம் 4,000 ரூபாயை கண்ணியப்பன் பெற்றுக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் பண […]

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நகை, பணத்தை கொள்ளை அடித்ததோடு தங்களை பிடிக்க வந்த பெண் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பியை இரண்டு கொள்ளையர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள குடியிருப்பில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் விரைந்து சென்ற காவலர்கள் இருவர் தப்பி ஓடிய கொள்ளையர்களை அடையாளம் கண்டு சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று மடக்கினர்.

திருப்பதியில் ஜட்டி அணிந்தவாறு செல்லும் இளைஞர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகவும் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கார் ஷோரூமில் திருட முயற்சித்துள்ளனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த காவலர்கள் திகைத்துப் போய் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார் மிகவும் ஆபத்தான ஜட்டி கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பது உறுதி […]

மதுரை மாவட்டம் துர்க்கை அம்மன் கோயில் உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து நான்காவது முறையாக மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நேத்து பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம் போல் கோவிலை பூசாரி பூட்டி சென்ற நிலையில் நள்ளிரவு கோயிலுக்குள் வந்து திருட்டில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கு முன்பு நடந்த மூன்று திருட்டு சம்பவங்களையும் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த பகுதியினர் குற்றம் […]

புதுச்சேரியில் மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவி பணத்தைப் பற்றிச் சென்றுள்ளார். வில்லி, தில்லியனூர், ஊரப்பாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் கருணாகரன் என்பவருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசி வந்துள்ளார். இதையடுத்து ஆசை வார்த்தை கூறி கருணாகரனை புதர் பகுதிக்கு மாணவி அழைத்து சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த மாணவியின் கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து கருணாகரனை விரட்டி சுமார் ஒரு லட்சம் ரூபாயை பறித்து […]

பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து பணம் திருடப்பட்ட சிசிடிவி காட்சியை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே ஒரு இளைஞர் முதலில் நோட்டமிருக்கிறார். அவருக்கு உதவியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி ஒரு நபர் காரின் அருகே தயாராகி இருக்கிறார். திடீரென காரில் ஓட்டுநர் இருக்கை. ஜன்னல் கண்ணாடியை உடைக்கும் அந்த இளைஞர் உள்ளே புகுந்து பொறுமையாக பணத்தை திருடி வெளியே எடுக்கிறார். இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு இரு சக்கர […]

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை கார் ஓட்டு ஓட்டுனராக பணியாற்றியுள்ளார் அய்யப்பன். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் காங்கேயத்தில் கடன் வாங்கித் தருவதாகக்கூறி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் கபளீகரம் செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏமாற்றிய தொகையை வசூலித்துத் தர வேண்டுமென்று பெண்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. நிதி நிறுவனங்களை நடத்தி அப்பாவி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதிக வட்டி ஆசை அல்லது நம்ப முடியாத சலுகைகளைக் […]