திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிபாளையம் பிரிவு அருகே , கார்த்திக்(32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனது செல்போனை ஜெகதீஷ் வயது(27), என்ற நபர் வழிமறித்து பிடிங்கியதாகவும் தெரிகிறது. அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவலரிடம் ஒப்படைத்து, அனுப்பர்பாளையம் காவல் நிலையம் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் செல்போனை பறித்த ஜெகதீஷ்(27) என்ற நபரிடமிருந்து சாம்சங் கைபேசி ஒன்று கைப்பற்றபட்டது. இதனையடுத்து அவா் மீது வழக்குப் […]
திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால் நாளொன்றுக்கு ரூ.585 சம்பளத்தைப் பெறும் முகமதுயாகத்அலி என்ற நபரின் அத்துமீறல்கள், பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளன. போலீஸ் வாகனத்தில் ரோந்துக்குத் துணையாகச் சென்றுவிட்டு, அதிகாலையில் காக்கிகள் கிளம்பியதும் களத்தில் இறங்குவதுதான் இந்த நபரின் முதல் வேலை. ஆம், சம்பளப் பணம் போதவில்லை என்ற அற்ப காரணத்துக்காக, ‘போலீஸ்’ என்ற […]
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும். ‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் […]
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் ஒருவன், கடையில் இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் மூட்டை கட்டி அள்ளி சென்றுள்ளான். இன்று கடை திறக்க வந்த ஊழியர்கள், கடை பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகாவை அதிரவைத்திருக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்காக 4% கமிஷனுக்கும் ரூ.50 லட்சத்துக்கும் ஆசைப்பட்டு ‘கடத்தல் குருவி’யாக நடிகை ரன்யா ராவ் மாறியதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வாகா திரைப்படத்தில் நடித்திருந்தார். துபாயில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கடந்த் 3-ந் […]
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற தர்மராஜ் என்ற நபர் பொதுமக்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தமும் ஜன்னலை உடைக்கும் சத்தமும் கேட்டு அந்த பெண் அக்கம் பக்கத்தில் இருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கையின் வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடை திருவிழா அமைந்துள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். 49 கிலோ வெள்ளி, ஆறு சவரன் நகை உட்பட 50 லட்சம் மதிப்புரான பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளே சென்று பாருங்கள் பொழுது பொருட்கள் திருடப்பட்டிருப்பது கண்டு […]
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர்களை காஷ்மீர் சுற்றுலா செல்வதாக கூறி பாலாஜி என்பவர் 2023 அக்டோபரில் 19 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களை இதுவரை சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றியதால் இது தொடர்பாக பள்ளி முதல்வர் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். பாலாஜியின் மகனும் அந்த பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியை ஏமாற்றி ஒருவர் சில்லரை வாங்கி சென்றுள்ளார். புதுப்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – லட்சுமி தம்பதி தேநீர் கடை நடத்தி வருகின்றனர். 100 ரூபாய்க்கு சில்லறை வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் இல்லாததால் அவர் கொடுத்த தாளை வாங்கிக்கொண்டு பன்னீர்செல்வம் சில்லறை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். மின்சாரம் வந்தவுடன் தாளை பார்த்த பொழுது சாக்லேட்டில் கிடைக்கும் ரூபாய் நோட்டு என்பது […]






