
கர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சிக்கன், நெய் அரிசி சாதம் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பல எதிர்ப்புகளை மீறி முன்னாள் பாஜக நிர்வாகி விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் அவரது நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோட்சாவின் மாநில செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக கௌரி வெறுப்பு பரப்பரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே […]

தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றுமில்லை அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஒருவர் எந்த வேலை செய்தாலும் அதை மதிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் மதிக்கப்படாதது தான் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது எனவும் கூறினார். எல்லா வேலையும் மதிக்கப்பட வேண்டும் என […]

பெங்களூரு மாநகராட்சியில் 108 நம்ம கிளினிக்கை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். பெங்களூரு மாநகராட்சி 108 நம்ம மருத்து கிளினிக்கில் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இன்று பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார் எனவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார். கிளினிக்குகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், டி பிரிவு ஊழியர்கள் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை […]

நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகள் இணைந்தால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். டெல்டா மாவட்டங்களில் சமீபத்திய மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறிய திருமாவளவன் தமிழக அரசு அறிவித்துள்ள 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் போதுமானதாக இருக்காது எனவும் கூறினார்.

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் இந்தியாவிற்கு புதிய பாதையை காட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா எரிசக்தி மாறும் என்ற பெயரில் கருத்தரங்கம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்தியாவின் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எரிசக்தி வளர்ச்சியில் இந்தியா மிகச் சிறப்பாக முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் இது நாட்டுக்கான புதிய பாதையை நடப்பு நூற்றாண்டில் காட்ட உள்ளதாக […]

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவுச் சின்னமாக பேனாவை கடலில் வைப்பதற்கு மீனவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் இவ்வாறு கூறியுள்ளார். மீனவ பொதுமக்கள் யாரும் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெரினாவில் வசிக்கும் மீனவர்களுக்கு நடப்பது என்னவென்று தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காகவே சிலர் நினைவுச் சின்னத்தை எதிர்க்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் 24 முறை சூடான கம்பியால் சூடு வைத்ததில் அந்த குழந்தை உயிரிழந்தது. இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகம் அனைத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கடுமையான நடவடிக்கை […]

கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பெங்களூருவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எச்ஐஎல் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை 20 ஆண்டுகளில் மூன்று டன் முதல் 15 டன் எடையுள்ள ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசார்பை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படும். இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். […]