
பிரதமர் மோடியை ஏர் இந்தியா CEO கேம்ப்பெல் வில்சன் சந்தித்து விபத்து குறித்து விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் சென்ற PM மோடி, விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்தியிருந்தார். இந்தச் சூழலில், விபத்துக்கான காரணம் குறித்து பிரதமரை சந்தித்து கேம்ப்பெல் வில்சன் விவரித்துள்ளார்.

அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட விடுதியில் இருந்து சென்னை டாக்டர் அருண் பிரசாத் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், விபத்து ஏற்பட்ட பிறகு பதறியடித்துக் கொண்டு முதல் மாடியில் இருந்து குதித்து தப்பித்ததாக தெரிவித்துள்ளார். தாங்கள் வெளியேறிய 15 – 20 நிமிடங்களுக்கு பிறகு மீட்புப் பணிகள் நடைபெற்றதாகவும் அருண் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் இருந்து சினிமாவில் கலக்கி நடிகைகள் பலர் உள்ளார்கள். அதேபோல் சின்னத்திரையில் நிறைய இளம் நாயகிகள் களமிறங்கியுள்ளார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா என்ற தொடர் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமாக நாயகியாக வலம் வந்தவர் தான் அன்ஷிதா அக்பர்ஷா.இந்த சீரியலுக்கு பிறகு குக் வித் கோமாளி 8வது சீசனில் கலந்துகொண்டனர் பிக்பாஸ் 8வது சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு விளையாடினார். பிக்பாஸ் வீட்டில் 84 நாட்கள் விளையாடியதற்காக இவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 25 […]

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இருப்பிட கண்காணிப்பு கருவி தற்போது மீட்கப்பட்டுள்ளது. 2வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய கருவி மீட்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் எமர்ஜென்சி லொக்கேட்டர் ட்ரான்ஸ்மீட்டர் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று பகல் 1.39 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33-வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் 23-வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாகப் பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை. […]

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண, குடும்பத்தினரிடம் ரத்த மாதிரி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. விமான விபத்தில் உடல்கள் அனைத்தும் தீக்கிரையாகி கரி கட்டையானது. இதனால், DNA சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண குடும்பத்தினரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 190 பேர் தங்களது ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளனர்.

அகமதாபாத் – லண்டன் சென்ற ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. 242 பேர் பயணித்த இதில் 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி விடுதியில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா தனது Profile படத்தை கருமையாக மாற்றி இரங்கல் தெரிவித்துள்ளது.

விமான விபத்து குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். 1950-களில் ரயில் தடம் புரண்டபோது அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகியதாகவும், அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 40 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. விமான விபத்தைத் தொடர்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. […]