பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதால், பிரயாக்ராஜை நோக்கி அதிக பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ரயில்களிலும், பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.   கும்பமேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார். கடந்த முறை 75 நாட்கள் வரை நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

Read More

கேரளாவில் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்து விபத்தில் சிக்கியது.   ஓட்டுநரின் இருக்கையில் அமர்ந்திருப்பவரை சக ஓட்டுனர் தாக்கியதும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.  

Read More

டெல்லியில் 150 கோடி ரூபாய் செலவில் ஆர்எஸ்எஸ் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பெயர் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம் கோபுர வடிவிலான மூன்று பகுதிகளில் தலா 12 மாடுகளை கொண்டுள்ளது.   1300 பேர் அமரக்கூடிய வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

Read More

உத்திரபிரதேசத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   உத்தர பிரதேச மாநிலம் வராதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜ் பால் சிங் மகன் விபின் குமாரின் திருமணம் நேற்று நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்ட நிலையில் உணவை சாப்பிட்டவர்களில் சுமார் 40 பேருக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.   […]

Read More

கேரள மாநிலம் காசர்கோட்டில் குழந்தைகள் பெண்களை தாக்கி அச்சுறுத்தி வந்த பருந்தை மக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே அந்த பருந்தை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்ட சில நாட்களில் மீண்டும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.  

Read More

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு சென்றடைந்தார்.   இந்திய வம்சாவழியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதை தொடர்ந்து மோடியை அதிபர் மேக்ரான் வரவேற்று அவருக்கு இரவு உணவு விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்த […]

Read More

தெலுங்கானா மாநிலத்தில் பல்கலைக்கழகம் மாணவர் விடுதியில் இரவு உணவின் போது இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  

Read More

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அந்த கட்டிடத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.   மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 99 ஆண்டு கால திட்டத்தை அதன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. 25 சென்ட் நிலத்தில் மூன்று தடங்களுடன் நவீன […]

Read More

ஜம்மு-காஷ்மீர் Ex CM மெஹபூபா முப்தியை கைது செய்த போலீசார் வீட்டுக் காவலில் அடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரமுல்லா செக்போஸ்ட்டில் லாரி டிரைவரை பாதுகாப்பு படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர்.   மேலும், கதுவாவில் போலீஸ் காவலிலிருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முப்தி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More
1 2 3 815