
சென்னை, வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நகரின் முக்கிய பகுதியான வடபழனியில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில், 6.65 ஏக்கர் பரப்பளவில் பேருந்து முனையம், வணிக வளாக கட்டடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் சில முக்கிய […]

சென்னையில் பலத்த சூறைக்காற்று இடி மின்னல் மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூரு மற்றும் திருச்சிக்கு இரண்டு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கோவையில் இருந்து 157 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சூறைக்காற்று மழை காரணமாக, சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதைப்போல் கொல்கத்தாவில் இருந்து 174 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் […]

சென்னை அருகே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது மாணவி அண்மையில் சேர்ந்தார். அவரை தூக்கிச் சென்று, சிட்லபாக்கத்தை சேர்ந்த காவலாளி மேத்யூ (49) பலாத்காரம் செய்தார். சிறுமி கத்தியபோது கம்பியால் தாக்கி 2 கால்களை உடைத்தார். சிறுமியின் சத்தம்கேட்டு மற்றவர்கள் வர, மேத்யூ ஓடிவிட்டார். எனினும் விசாரணை நடத்தி, மேத்யூவை போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸ் கைது செய்தது.

சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீது, லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லேசர் ஒளி இடையூறால் தரை இறங்க வந்த விமானம், சிறிது நேரம் வானில் தத்தளித்தது, பிறகு பத்திரமாக விமானம் தரையிறங்கியது 2 வாரங்களில் 3வது முறையாக விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடையால் மறுதேர்வு கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மின்தடை காரணமாக தேர்வில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வு 2025, ஜூன் 4-ம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. சென்னை ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், […]

சென்னையில் நேற்று இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஈக்காட்டுத்தாங்கலில் 15 நிமிடங்களாக கன மழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பாரிமுனை, மின்ட், ராயபுரம், வண்ணாரப்பேடடை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபாதையில் […]

சென்னை திரும்பிய திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்த திமுகவினர். பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது மற்றும் தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியா சார்பில் கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்தது.

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி நிர்ணயித்து வருகின்றன.அதன்படி வீட்டு […]

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதன் பாதிப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மறைமலைநகரை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் […]