திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் மார்ச் 9-ம் தேதி நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநில மாநாடு நேற்று இரவு முடிவடைந்தது. எனினும், மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.   இந்த மாநாட்டிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். இதற்காக சுமார் […]

Read More

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று நடைபெறவுள்ளது.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதற்காக 650 ஏக்கர் பரப்பளவில் 9 நுழைவாயில்களுடன் பிரமாண்ட […]

Read More

தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில், இந்தி மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.   இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளதோடு, தி.மு.க. நிர்வாகிகள் அங்குள்ள இந்தி எழுத்துக்களைக் கருப்பு மை பூசி அழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் புதிய நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ […]

Read More

திருச்சி மற்றும் சென்னை இடையேயான பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்கள் வழியாக இயக்கப்பட்டு வந்த திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் தற்போது நிரந்தர சேவையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.   இதற்கு முன்னதாக, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை வழியாக ஒரு சிறப்பு ரயிலாக மட்டுமே இது இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, இந்த ரயிலை (வண்டி எண்: 16808) ஒரு […]

Read More

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். துறையூர் அருகே உள்ள கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவர், தனது நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருந்தார். இதற்காக தாட்கோ மூலம் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.   இருப்பினும், மின் இணைப்பு வழங்க கால தாமதமானதால், கடந்த 27-ம் தேதி […]

Read More

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும் சேகர்பாபு மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வளைத்துள்ளார். தனது பிடிவாதத்தால் அதிமுகவுக்குள் ஒபிஎஸ்-ஐ இணைக்க மறுத்த எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக கரைந்து வருவதாக, அக்கட்சியினர் வேதனையை தெரிவித்துள்ளனர்.   பிப்ரவரி 27, சென்னை அண்ணா அறிவாலயம் ஒரு போர்க்களத்தின் பரபரப்போடும், ஒரு பெரும் மாற்றத்தின் அதிர்வோடும் காட்சியளித்தது. வழக்கமாக […]

Read More

கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் ‘குற்றம் குற்றமே’ வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பிப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை அன்று, .வாசகர்களின் ஆசியோடு இதழின் புதிய அலுவலகத் திறப்பு விழா திருப்பூரில் அரங்கேறியது.   துணிச்சலின் புதிய முகவரி இதோ!   திருப்பூர் 15 வேலம்பாளையம் […]

Read More

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.வடிவேல்சாமி, பொருளாளர் டி. சதீஸ்குமார் மற்றும் இணைச் செயலாளர் எஸ். விக்னேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது, இந்த இட ஒதுக்கீட்டை வரும் […]

Read More

திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்தித்தார்.   அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ என அறிவித்திட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

Read More
1 2 3 48