
‘திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே’ எனக் குறிப்பிட்டு விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நின்றால் ஜெயிக்க வைப்போம் என்று அம்மாவட்ட தவெகவினர் கூறுகின்றனர். ஏற்கெனவே மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய இடங்களில் விஜய் களமிறங்குகிறார் என தகவல்கள் பரவின.

திருச்சி அருகே பொன்மலை மாவடிகுளத்தில் ரயில்வே பணிக்காக மண் அள்ளுவதாகக் கூறி சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவிரி நீர்வள ஆதார பாதுகாப்பு சங்கம், பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி. இயந்திரங்களைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை மஞ்சள்திடல், கம்பிகேட் உள்ளிட்ட பகுதியில் புதிய ரயில்வே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு மண் தேவைப்படுவதால் பொதுப்பணித் துறையினரிடம் மாவடிகுளத்தில் 2.5 ஏக்கர் […]

திருச்சி: தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, இளைஞரிடம் ₹1 லட்சம் மோசடி செய்த நபர் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சி வரகனேரியைச் சேர்ந்த தௌபிக், அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தேநீர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் கடைக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ (என்கிற ஷியாம்) என்பவர் அடிக்கடி வந்துள்ளார். அப்போது, ஜெத்ரோ தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு தௌபிக்குடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். நட்பைப் பயன்படுத்தி, காவல்துறையில் ஏலம் விடப்படும் வாகனங்களை குறைந்த […]

திருச்சி விமான நிலைய வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகே இருந்த அம்பேத்கரின் சிலை சேதமடைந்ததால் அம்பேத்கரின் சிலை அமைப்பு குழு என்று ஒரு குழுவை உருவாக்கியது. அந்த குழுவின் மூலம் புதிய அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்ட நிலையில் […]

திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவேரி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்திட கோரியும், சப்பானி கோயில் தெரு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி அமைத்திட கேட்டும், சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஊராட்சி கிளைகளின் செயலாளர்கள் பாரதிதாசன், சீனிவாசன், […]

திருச்சி பொன்மலை நார்த்” டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசீதா தேவி மகாமாரியம்மன் கோயிலில் சீதாதேவி மகா மாரியம்மன், ஸ்ரீகற்பக விநாயகர், சதுர்முக வாராகி அம்மன், சதுர்முக கால பைரவர், ஸ்ரீஆனந்த சாய்பாபா கோயிலில் உலக நன்மைக்காக மஹா சண்டியாகம் விழா இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி நேற்று (6-ந் தேதி) மங்கள வாத்தியம், மஹா கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம், லெட்சுமி ஹோமம் , மங்கள […]

திருச்சியில் ரூ.246 கோடி செலவில் கட்டப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 2025 மே 9 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. தினசரி 3200 பேருந்துகளைச் சமாளிக்கும் திறன் கொண்டது. நகர்ப்புற மற்றும் வெளியூர் பஸ்களுக்கான தனித்தனி ஏற்பாடுகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், உதகை மலை ரயில் போன்ற ரயில்களுக்கு பிரத்யேகமாக ரயில் பெட்டிகளும் வடிமைக்கப்படுகின்றன. இவை தவிர சரக்கு வேகன்கள் உற்பத்தியில் இப்பணிமனை சிறப்பிடம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்த நீராவி ரயில் என்ஜின்களை பழுது நீக்குவதில் பொன்மலை பணிமனை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.பொன்மலை பணிமனையில் சிறப்புகளை வைத்து மத்திய அரசு, தேசிய அளவிலான சிறந்த […]

திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் அருண் மாரிமுத்து பணிச்சுமை மற்றும் நீதிபதியின் கடுமையான உத்தரவுகளை தாங்க முடியாமல் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு நீதிபதி மட்டுமே காரணம் எனக் கூறி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். மேலும், உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புகார் மனு அனுப்பினர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் […]