
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது குழந்தை உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்த தாய் தனது குழந்தைக்கு சில நாட்களுக்கு முன் உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு தாயின் நூடுல்ஸை சமைத்து கொடுத்து விட்டு மீதமுள்ளவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் அதனை சாப்பிட கொடுத்ததாக கூறப்படுகிறது. மாலை வரை சோர்வாக இருந்த அவர் திடீரென […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பேருந்து மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பழையபாளையம் பகுதியை சேர்ந்த தேவதர்ஷினி என்ற 4 வயது சிறுமி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பேருந்து சிறுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீசார் அந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

திருச்சி மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லால்குடி பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் தன்னுடன் படிக்கும் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த நெடுஞ்சாலைத்துறை இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காவலர் பள்ளியில் பயிற்சியின் பொழுது பெண் காவலருக்கு கத்தி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரில் பெண் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் 450 பெண் புதிய காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் உசிலம்பட்டி அருகே உள்ள முத்துப்பாண்டிபட்டியை சேர்ந்த தங்கம் என்பவர் பயிற்சி பெற்று வருகிறார். புதன்கிழமை காலை பயிற்சியின்போது துப்பாக்கியை தோளில் சுமந்துகொண்டு தடை தாண்டுதலில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது தடுமாறி கீழே விழுந்த […]

திருச்சி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்தார். டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சரின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வினை மேற்கொண்டார். அப்பொழுது அலுவலக வருகை பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே யாருடைய உதவியும் இன்றி குழந்தையை இன்று புதரில் வீசிச்சென்ற பெண்ணும், அந்த குழந்தையும் மீட்கப்பட்டனர். ஆண்டவர் கோயில் ஆற்றின் அருகே புதர் ஒன்றில் இறந்து பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட வழிப்போக்கர்கள் அத்தனை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் தாய் அங்குள்ள கோயில் வளாகத்தில் மயங்கி கிடந்துள்ளார். விசாரணையில் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்ட நிலையில் முறையற்ற உறவில் குழந்தை […]

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பூசாரிபட்டி பாப்பான் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாப்பான்குளத்தில் நான்கு சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுவர்களின் மூன்று பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். மகன்கள் இறந்ததை கேட்ட அதிர்ச்சியில் தந்தை மயங்கி விழுந்துள்ளார். தந்தைமணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவேல் மலைவாழ் மக்களிடம் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பசுமை வீடுதிட்ட பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. வீடியோவில் பயனாளிகள் ஐந்து பேரும் வட்டார வளர்ச்சி இருந்த அறைக்குள் வருவதும் அதில் ஒருவர் தாங்கள் 5 பேர் வந்துள்ளதாகவும் ஒரு வீட்டிற்கு 3 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளதாகவும் 15,000 ரூபாயை கொடுக்கிறார். பணத்தை பெற்றவர் […]

துறையூர் அருகே, புத்தனாம்பட்டியில் உள்ள கல்லூரியில், மாணவியை தாக்கிய முதல்வரால் மாணவ- மாணவியர் கிளர்ந்தெழுந்துள்ளனர். இச்சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ளது, புத்தானாம்பட்டி. இங்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு நினைவு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 13 துறைகள் உள்ளன. அதில் சுமார் 1000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், ஏப்ரல் 21 வியாழக்கிழமை அன்று மதியம் […]