திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும் பொதுமக்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் ஊராட்சியில், பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) தனியாரால் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை, புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு, […]
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் தி.மு.க ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலரை, அதற்கான பணியில் இருந்து விடுவித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்), திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முடிகண்டம் பகுதியில் நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக […]
திருச்சியில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 28 வயதான இவர், புத்தூரில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார். தாமரைச் செல்வனுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், காலை 8.30 மணியளவில் தாமரைச்செல்வன் தனது இருச்சக்கர வானத்தில் அலுவலகம் நோக்கி சென்றுள்ளார். செடல் மாரியம்மன் கோவில் அருகே, அவரின் பைக்கிற்கு முன்பும், பின்பும், இரு பைக்குகளில் 5 பேர் […]
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு 2 நாட்கள் அவர் பயணிக்கும் சாலைகளில் ஆளில்லாத விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி செல்கிறார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, இரவு சாலை வழியாக திருச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள […]
திருச்சியில் கைதாகி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர், நாகர்கோயிலில் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். கைதான மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், கோணக்கரை மயானம் முதல் குடமுருட்டி செல்லும் சாலை வரும் நவம்பர் 5, 2025 ஆம் தேதி (நாளை) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் திரு. லி. மதுபாலன் அவர்கள் அறிவித்துள்ளார். ”திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்.09, உறையூர் முதல் குடமுருட்டி (கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை) பகுதியில், உய்யகொண்டான் ஆற்றின் கிழக்குக் கரைப் பகுதியில் 2.120 கி.மீ. நீளத்திற்குப் […]
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய பகுதியில் கடந்த 6-ம் தேதியன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகளில் சிக்கி சிவா-சுகந்தி தம்பதியரின் மகள் 12 வயதுடைய கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அசம்பாவிதத்தில் உயிரிழந்த கார்த்தியாவின் இல்லத்திற்குச் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, தமது சொந்த […]
திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை குழியில் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி சுப்பையா கன்ஸ்ட்ரக்சன் ஒப்பந்த பணியாளர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு (32) என்பவர் இறக்கியவர் ஓரு மணிநேரத்திற்கு மேல் காணாத நிலையில், புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த ரவி (38) என்பவர் பிரபுவை இறங்கி தேட சொல்லி தனியார் நிறுவன ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் நிர்பந்தித்ததன் விளைவாக பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இரு […]
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறு மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, கல்வித்துறை அதிகாரிகளுடன் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.






