
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த காட்சி வைரலானதை தொடர்ந்து வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த வாகனம் வேப்புகானா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த பொழுது […]

திருச்சி மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொத்த மேட்டுப்பட்டி என்ற இடத்தில் போட்டியை பார்வையிட்ட பார்வையாளர் முருகானந்தன் உயிரிழந்துள்ளார். மாடு முட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். பாலமேடு, சூரியூர், ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் உயிரிழந்த நிலையில் மணப்பாறை ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சியில் சாலை விதிகளை மதிக்காமல் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. நகர் பகுதி சாலைகளில் தலைக்கவசம் கூட அணியாமல் பகலில் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து ட்ரிபிள் சென்றும், வீலிங் செய்தும் இளைஞர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவும் நிலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மேல் அம்பிகாபரத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் பொங்கல் பரிசு தொகப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்று உள்ளார். தமிழரசி வீட்டில் இருந்து ரேஷன் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தமிழரசி அணிந்திருந்த ஏழரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். கொள்ளையர்கள் செயினை பறித்த பொழுது தமிழரசி நிலை தடுமாறி கீழே […]

திருச்சியில் பிறந்து 10 நாட்களை ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் நீதிபதியின் உத்தரவின் பேரில் குழந்தையின் தாயை போலீசார் சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தம்பதிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த குழந்தை பத்தாவது நாளிலேயே கடத்தப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குழந்தையின் தாய் ஜானகியை போலீசார் கைது செய்தனர். விசாரணையை தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை ஜானகி தெரிவித்ததால் போலீசார் குழப்பம் […]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சேமிப்பு தொகைக்காக ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த மனைவியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். வெட்டுக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வியாபாரி ராமர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அருண்குமார் என்ற நபர் சரணடைந்தார். ராமரின் மனைவிக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சேமிப்பு கணக்கிற்கு ஆசைப்பட்டு அவரை ,கொல்ல முயன்றதையும் கூறியுள்ளார். இதனையடுத்து அருண்குமாரையும், ராமரின் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி அருகே பள்ளி மாணவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காப்பாற்ற முயன்றே அவரது தாய் மாமனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாற்றுகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது அக்கா மகன் நந்தகுமார். 12ஆம் வகுப்பு படித்த வந்த நிலையில் விடுமுறைக்காக தாய்மாமன் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை காப்பாற்ற சண்முகம் முயற்சி செய்த பொழுது இருவரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக […]

திருச்சியில் நன்கொடை தர மறுத்த ரேஷன் அரிசி விற்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். பி யு நகர் அணைக்கட்டி மைதான பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவர் ரேஷன் அரிசி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பாலக்கரை மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த நபர்கள் அவரை மறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த சிவனேசன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]

திருச்சியில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய கணவர் குடும்பத்தினர் மீது புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். திருச்சி மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா. இவருக்கும் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் ராஜரத்தினத்தின் மகன் தினேஷ் என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 11 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் மற்றொரு பெண் உடன் கணவருக்கு உள்ள தொடர்பை தட்டி […]