
மேட்டுப்பாளையத்தில் தரையோடு தரையாக வெட்டப்பட்டிருந்த விவசாய கிணற்றுக்குள் முதலை ஒன்று புகுந்தது. வனத்துறையினர் வருவதற்குள் அருகில் இருந்த புதர்களுக்குள் முதலை தப்பிக்க முயன்றதால் அதை பிடிக்க வனத்துறையினர் வலைகளை கட்டினர். பின்னர் அதனை பிடித்து சென்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத்த தகராறு இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 2 வயது குழந்தை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசுக்கும் அவரது மனைவி கோமதிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கோமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக […]

கேரளாவில் ஆசை ஆசையாக முறுக்கு சாப்பிட குழந்தையின் தொண்டையில் முறுக்கு சிக்கிக் கொண்டதால் குழந்தை இறந்து போனது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிகரா பகுதியை சேர்ந்தவர் விஜயஸ் என்பவரின் மகள் வைஷ்ணவி ஒரு வயது நிரம்பிய வைஷ்ணவி இன்று காலை ஆசை ஆசையாக முறுக்கு சாப்பிட்டு உள்ளார். தாய்க்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அப்பொழுது முறுக்கு தொண்டையில் சிக்கிக்கொண்டது. அழுத குழந்தையை தாய் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். வரும் வழியிலேயே […]

ஒட்டப்பிடாரத்தில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் தெருக்களில் வீலிங் செய்த மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிரதீப்குமார் தெருகளில் அதிவேகமாக வீலிங் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த மூதாட்டி செண்பகத்தம்மாள் மீது மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அந்த பகுதி மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்று தான் வலியுறுத்தி வந்ததை உச்ச நீதிமன்றமும் பதிவு செய்துள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தான் வலியுறுத்தி வந்ததை உச்ச நீதிமன்றம் இப்போதும் பதிவு செய்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். சண்டை போட்டுக் கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இணக்கமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நெய்வேலி அருகே வெறிநாய் கடித்து ஒரு மாதத்திற்கு பிறகு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கும் அன்பழகன் என்பவரின் 12 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்த சிறுவன் பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு மாதமாகவே சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சிறுவனின் நடவடிக்கை மாறியதால் பதற்றம் அடைந்த பெற்றோர் அவனை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து […]

சென்னையில் 25 லட்சம் ரூபாய் பணம் மோசடி ஈடுபட்டதாக பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் ரூ.25 லட்சம் பணமோசடி ஈடுபட்டதாக புகார் கைது செய்யப்பட்ட ஜானகிராமன் பாஜக மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் மஞ்சளை கொள்முதல் செய்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சள் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 100 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் மற்றும் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மஞ்சள் சாகுபடியில் புழு தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மருந்துகள் அடித்தும் புழுக்களை கட்டுப்படுத்த முடியாததால் உரிய மருந்துகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் […]

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். சினிமாவை மிஞ்சும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர், விரட்டி பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு, அங்கித் திவாரியை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். […]