
திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூர் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தில் மக்கள் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் மாதனூர் பகுதியில் இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் தற்காலிகமாகமணல் மூட்டைகள் வைத்து பாலம் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி மீண்டும் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சிலர் ஆபத்தை உணராமல் பயணித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் தாக்கியதில் பல இடங்களில் தென்னை மரங்கள் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. புதுச்சேரி நகர பகுதிகளான முருகம்பக்கம், மரப்பாலம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தட்டாஞ்சாவடி, இந்திராநகர் உட்பட பல […]

பொதுவாக கணவனிடம் மனைவி அடி வாங்கும் வீடியோ வழக்கமாக வெளியாகும். ஆனால் தற்பொழுது மனைவி தனது கணவரை வீட்டிற்குள் கட்டையால் துரத்தி துரத்தி அடிக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் தென் கவுண்டி பகுதியில் 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த குழந்தையை அதன் தாய் பாய்ந்து சென்று குதித்து காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 23 வயதான இளம்பெண் தனது 18 மாத குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பொழுது அந்த குழந்தை எதிர்பாராத விதமாக வழியில் இருந்த 20 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதை கண்ட அந்த தாய் அதிர்ச்சி அடைந்து பாய்ந்து சென்று […]

விளையாட்டு மைதானத்தில் ஐஏஎஸ் அதிகாரி நாயுடன் நடை பயிற்சி சென்றது சர்ச்சையான நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானமும் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அனைத்து விளையாட்டுகளும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் சில அரங்குகள் முன்கூட்டியே மூடப்படுவதாக […]

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் தனித்தனியாக பிரிந்து முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்றைய விழாவில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி உள்ளே வருவதற்கு முன்பாகவே திமுக தொண்டர்களும் பாரதிய ஜனதா தொண்டர்களும் பரஸ்பரம் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி கொண்டனர். பாரதிய ஜனதாவினர் பாரத் மாதா கி ஜே என்றும், மோடி ஜி வாழ்க என்றும் முழக்கங்களை எழுப்பினார். அப்பொழுது பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க […]

பாந்த்ரா ஹரிதுவார் எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்திற்கு முன்னதாக வந்ததையடுத்து மத்தியபிரதேசம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உற்சாகமாக பிளாட்பாரத்தில் கை தட்டி சுற்றிவளைத்து நடனமாடி மகிழ்ந்தனர். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நூல் விலை குறைப்பு, கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை துரிதப்படுத்துவது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் டெல்லி புறப்படும் பொழுது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டுக்காக 4 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை எடப்பாடிபழனிசாமி பிரதமரிடம் வழங்கினார். நூல் விலையை குறைக்க வேண்டும், கோதாவரி காவிரி […]

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது படத்தின் பிரஸ் மீட் மேடையில் நடிகர் அஸ்வின் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன்முலம் நடிகர் அஸ்வின் பல இன்னல்களை சந்தித்து வந்தார். தான் கேட்ட 40 கதைகளில் அனைத்திலும் தூங்கி விட்டேன் என்று அவர் கூறியது, இன்று வரை அவருக்கு மிகப்பெரிய பாதகமாக அமைத்துள்ளது. இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால், ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய்.இப்படத்தை […]