புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேங்கைவயல் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வேங்கைவயல் பகுதியில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேரை காவல் […]
குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதியம் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி செல்ல உள்ளார். அரிட்டாபட்டியில் […]
ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு இன்றே கடைசி என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது. அதனைப் பெற 18ம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட்டிப்பு செய்து இன்று மாலை வரை வழங்கப்படவுள்ளது.
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ச இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் யோஷித 3 முறை ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார்.
திருச்சியில் மளிகை கடை உரிமையாளர் மாடு முட்டி தலையை சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 42 வது வார்டு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ஸ்டீபன் என்பவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது […]
காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். மாணவனின் உடலை கைப்பற்றிய காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். காரைக்குடி அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை […]
சென்னை வேளச்சேரியில் டியூஷன் சென்று விட்டு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவியை வளர்ப்பு நாய் கடித்ததால் காயம் அடைந்ததாகவும் சிறுமியை நாய் கடித்த பொழுது காப்பாற்ற முயற்சிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக நாயின் உரிமையாளருடன் மாணவியும் அவரது பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாயின் உரிமையாளர் அலட்சியமாக பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலையில் வீடுகளின் மீது விழுந்த ராட்சத பாறையின் பெரிய பாகம் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. பென்சில் புயலின் பொழுது உருண்டு விழுந்த அந்த பாறையை திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் ரசாயனம் ஊற்றி உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரிய பகுதி உடைந்துள்ள நிலையில் மற்ற பகுதிகள் படிப்படியாக உடைந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை கோரிப்பாளையம் பிரதான சாலையின் இரவில் டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தை வைத்து சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.