
இரட்டை கொலை வழக்கில் ஜாமீன் பெற்று 5 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிகார் இளைஞர் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஓஎம்ஆர் சாலையில் மாயாண்டி அவரது மனைவி வெள்ளி நாயகி கொலை செய்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். மனைவியின் வங்கி பரிவர்த்தனையை கண்காணித்து வந்த சைபர் கிரைம் போலீசாருக்கு மும்பையில் ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்த […]

ஆறு மாதங்களாக சிறையில் இருந்து வெளியே வந்து நண்பரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தவர் அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு தனது உறவினரான வெங்கடேஷ் என்பவரிடம் ஜாமின் ஏன் விரைவில் நடக்கவில்லை என கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஜெகநாதன் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வெங்கடேசனை போலீசார் கைது […]

தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி வெளியிட்டுள்ளது. குணப்படுத்தவே முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகள் கண்ணியமாக இருப்பதற்கான உரிமை இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணியமான மரணத்திற்கான உரிமை தொடரமான விஷயத்தை வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு கருணைக் கொலைக்கு கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது. தீராத நோயால் கஷ்டப்படும் நோயாளிகளை […]

பலமுறை பரிகாரம் செய்தும் கணவனுடன் பிரச்சனை தீராததால் ஜோதிடரை ஆள் வைத்து கொலை செய்த பெண் போலீசில் சிக்கியுள்ளார். நாகர்கோவிலில் ஜான் ஸ்டீபன் என்பவரிடம், கலையரசி என் பெண் கடந்த 3 ஆண்டுகளாக ஜோதிடம் கேட்டு பரிகாரம் செய்துள்ளார். ஆனாலும், கணவனுடன் பிரச்சனை தீராததால் பரிகாரத்திற்கு ஆன ரூ.9.5 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். ஜான் ஸ்டீபன் கொடுக்காததால் அவரை ஆள் வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

ஈரானின் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நீதிபதிகள் பலியாகினர். உயிரிழந்த நீதிபதிகளான அல் ரசினி, அல் மொஜிஸ்சே இருவரும் பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லாததால், காரணம் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சி உத்திரமேரூர் அருகே 3 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்களின் முகம் மட்டும் தீயிட்டு எரித்து ஏரியில் வீசப்பட்டுள்ளனர். ஏரியில் மிதக்கும் சடலங்கள் மீட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலமாக மிதந்த 3 பேருக்கும், சஞ்சய் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நியூ பார்ட்டியில் 4 பேரைக் கொலை செய்து சடலங்களை செப்டிக் டேங்கில் மறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MP மாநிலம் பர்ஹவான் பகுதியில் உள்ள வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் ஆய்வு செய்ததில் அள்ள அள்ள சடலங்கள் கிடந்துள்ளன. விசாரணையில், கடந்த 1ஆம் தேதி நடந்த விருந்தில், ஹவுஸ் ஓனர் சுரேஷ், பிரஜாபதி உள்ளிட்ட அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் திங்களூரில் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்து அதனை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்திய நபரை மது அருந்தலாம் என கூறி அழைத்து சென்று வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததாக பணம் வாங்கிய நபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மகனை அடித்தவர்களை தட்டி கேட்க போன தந்தையும் தாக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாகரன். அவரது மனைவி கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை செல்போனில் வைத்துள்ளார். அதனை அறிந்த பெண் வீட்டார் கார்த்திகை அடித்துள்ளனர். மகனை அடித்தது குறித்து கேட்க போன கருணாகரனை பெண்வீட்டார் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். […]