
உத்தரகாண்ட், முசோரி கெம்ப்டி அருவியில் ஒரு பாம்பு பதற வைத்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போது, தண்ணீரில் ஒரு பெரிய பாம்பு வர, மக்கள் பயத்தில் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாம்பை கண்டு ஓடிய மக்கள், ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை டிரம்ப் எதிர்ப்பதால், அவரை நாட்டின் முதல் எதிரியாக ஈரான் குறிப்பிட்டதாகவும், அந்நாட்டால் தங்களுக்கும் அணு ஆயுத ஆபத்து இருப்பதால் தான் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை பதில்தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோயில் பழக்கவழக்கம், மரபுகளை பின்பற்றி குடமுழுக்கு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி.யை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்துப் பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், […]

மக்கள் தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மக்கள் தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து உலகப்போர் உள்ளிட்ட காரணங்களால், சாதிவாரிக் கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கொரோனா வைரஸ் பரவல் […]

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது.இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதேசமயம், இந்தத் திட்டம் அறிமுகம் செய்தபோது விண்ணப்பித்த சிலர் பயனாளிகளாக சேர்க்கப்படவில்லை. அதேபோல், பலரும் புதிதாய் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கக் காத்திருக்கின்றனர்.எனவே, தகுதியான விடுபட்ட […]

தெலங்கானா மாநிலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலியான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தயாரான சிலைகளை கிரேன் மூலம் தூக்கி வைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மின்கம்பி அதன்மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணை இன்று காலை திறக்கப்பட உள்ளதால், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிப்பு

முன்னாள் முதல்வர், மறைந்த விஜய் ரூபானி அவர்களின் மனைவி அஞ்சலி ரூபானி, அவர்களது மகன் ரிஷப் ரூபானியுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். முன்னாள் முதல்வர் உடல் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருந்து விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். பூத உடல் விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்படும்