
ஆந்திர மாநிலம் பீமாவரம் மற்றும் குஜராத்தின் காந்திநகர் என்று செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தாராவின் 125வது பிறந்த நாளில் ஓராண்டு கால விழாவை முன்னிட்டு 30 அடி உயர சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி அதனைத் தொடர்ந்து புதிய தொழில்களுக்கான பயிற்சி திட்டங்களின் கீழ் உதவி பெற விருக்கும் முதலாவது 30 […]

பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மின்னல் இடியுடன் பெய்த கனமழையால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 10 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக […]

சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது பால் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்த புதுமணப்பெண் சௌந்தர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவர் நீலகண்டன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் ஆனது. அதற்குள் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் சூழலில் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தனியார் பேருந்தில் பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அதில் பயணித்த தந்தை மகள் நூலிழையில் உயிர் தப்பினர். சுரேஷ்குமார் தனது மகளுடன் பேருந்தில் சென்ற பொழுது பக்கவாட்டில் வந்த பேருந்தில் ஒரு சக்கர வாகனம் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய சுரேஷ்குமாரும், அவரது மகளும் பேருந்து சக்கரத்துக்கு அருகே உள்ள தந்தையின் சுரேஷ்பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் […]

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் NINI 2 சீரியலில் தனது ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை என சொல்லி திடீரென வெளியேறினார். அதற்கு பின் கலர்ஸ் தமிழில் “இது சொல்ல மறந்த கதை” என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் அடிக்கடி போட்டோஷூட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ரச்சிதா. அவர் அடுத்து […]

கேரளாவில் பச்சிளம் குழந்தையை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் . மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தனது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையின் காலில் சூடு வைத்துள்ளார். வலியால் துடித்து குழந்தையை மனைவி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரில் டிப்பர் லாரி உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து மின்கம்பத்தின் மீது விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. பேருந்து லாரியின் பக்கவாட்டில் உரசியதால் இதனால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. மின்கம்பம் முறிந்து பேருந்து மீது விழுந்த நிலையில் முன்பக்க கண்ணாடி உடைந்து முன்பக்க இருக்கையில் இருந்த மற்ற பயணிகள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை வீசி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏகாம்பரம் என்பவரது வீட்டு திண்ணையில் நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் பச்சிளம் குழந்தைகளை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை வீசிச் சென்றது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.