
சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் எட்டு சவரன் நகைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தேவி என்பவரின் வீட்டுக்கு கடந்த 19 ஆம் தேதி வீடு கேட்பது போல் சென்ற இரு நபர்கள் அவரை அறைக்குள் தள்ளிவிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துக்கொண்டு காலில் விழுந்து பண தேவைக்காக கொள்ளையடித்ததாக கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு தப்பி உள்ளனர். […]

சென்னை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்த கார் முன்னாள் சென்ற பேருந்து மீது மோதியதன் காரணமாக அதன் பின்னால் வந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதியதில் கார் தீப்பிடித்து எறிந்தது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தின் 183 வது ஆட்சியாளராக கிராந்தி குமார் பாடி பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த 2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக அண்மையில் நிறுவனம் செய்யப்பட்டார். அதன்படி பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு முன்னாள் ஆட்சியர் மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய ஆட்சியர் கிராந்திக்குமார் மக்களின் குறைகளை கேட்கவும், அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களை சென்றடைய நடவடிக்கை எடுப்பதாக […]

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்த காட்சி வைரலானதை தொடர்ந்து வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த வாகனம் வேப்புகானா பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த பொழுது […]

சென்னையில் 5ம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அவரது செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். அதில் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது அப்படி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளர்களுக்கு கார் பார்க்கிங் வளாகத்தை மத்திய வளாகத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ஆதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஆறு அடுக்குகள் கொண்ட பன்னடுக்கு கார் பார்க்கிங் வளாகம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பார்க்கிங் வசதி இன்று திறந்து வைக்கப்படுகிறது. மொத்தம் 2,150 கார்களை இந்த பார்க்கிங்ல் நிறுத்த முடியும். […]

மதுரையில் பட்டப்பகலில் மனைவியை குத்தி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். தெற்கு வாசலை சேர்ந்த வர்ஷா என்பவர் தனது கணவர் பழனி நகை பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் சாலை நடந்து சென்ற வர்ஷாவை பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் தப்பி சென்ற பழனியை கைது செய்தனர். குடும்பம் நடத்த வர மறுத்ததால் […]

கோவையில் மதநல்லிணக்கத்தை பெறும் வகையில் பழனி பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள் உணவு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் தண்ணீர் தொட்டிக்குள் திரையரங்கு எலக்ட்ரீசியன் வெங்கடேச பெருமாள் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. தண்ணீர் தொட்டியை சோதனை செய்த பொழுது அழுகிய நிலையில் ஆன் சடலம் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதி தண்ணீர் தொட்டியில் உள்ள மோட்டாரை இயக்கும் பணியில் ஈடுபட்டார். […]