
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 183 ரன்கள் எடுத்துள்ளது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை மூன்று முப்பது மணிக்கு தொடங்கிய 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய டெல்லி […]

விறுவிறுப்பாக நடந்த வந்த மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்றிரவு மும்பை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. மும்பை, உத்தரபிரதேசம், பெங்களூரு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கின. 5 அணிகளில் புள்ளிப்பட்டியல் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற நிலையில், டெல்லி- மும்பை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பலம் வாய்ந்த […]

IND ENG இடையேயான 2வது T20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜன.,25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விலை ₹1,000 – ₹15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ZOMATO DISTRICT செயலி வாயிலாக விற்பனை செய்யப்படும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் கவலைக்குரியது அல்ல என பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது பந்து தாக்கி ரோகித் சர்மாவிற்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. பயிற்சியின் போது வழக்கமாக இருக்கும் காயம் தான் என ஆகாஷ் கூறுகிறார். இந்த காயங்களால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த கேப்டனையும் விட அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கோலி. இந்திய அணியின் கேப்டனாக அவர் விளையாடிய 68 ஆட்டங்களில் 40-ல் வெற்றி பெற வைத்துள்ளார். இருப்பினும், கோலிக்கு கேப்டன் பதவி எப்போதும் ரோஜாக்களின் படுக்கையாக இருக்கவில்லை என்பது தான் உண்மை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 1-4 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தபோது, அணியின் கேப்டனாக கடினமான சூழலை எதிர்கொண்டார் கோலி. அந்த […]

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு டிங் லிரென் கடுமையான போட்டி நிலவி வந்தது. 13வது சுற்று வரை இருவரும் சமபுள்ளிகள் இருந்ததால் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நடந்த 14வது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58வது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் […]

இந்திய மருத்துவர் கழகம் (IMA) சார்பில் அவுரங்காபாத்தில் மருத்துவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திருப்பூர் SAK CLINIC டாக்டர் சையது தாஹா, ஷாட் புட், ஜாவலைன், டிகஸ் எறிதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம், 2ஆவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. 3ஆவது நாள் ஆட்டமான இன்று மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால் முதலில் போட்டி தொடங்குவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது. பிறகு கைவிடப்பட்டது.

திருப்பூர், பி.என்.ரோடு, திருமலை நகர், ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கே வி கிரி மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அவரது 100வது நினைவு தினத்தையொட்டி திருப்பூர் வடக்கு மண்டல அளவில் உள்ள அரசு, மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி சிறுபூலுவப்பட்டி, தாய் மூகாம்பிகை நகர், ஸ்ரீ சரஸ்வதிகிரி கார்டன் விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. போட்டியை ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயா மோகன் தொடக்கி […]