--- --:--:-- --

திருவாடானை அருள்மிகு சினேகவல்லி அம்மன் ஆலய ஆடிப் பூரத் திருவிழாவில் அம்பாள் அன்ன வாகனத்தில் வீதி உலா

e

திருவாடானை அருள்மிகு சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலின் ஆடிப் பூரத் திருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

 

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சினேகவல்லி அம்மன்  அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார். முன்னதாக ‘ விநாயக பெருமான் மூஞ்சூறு வாகனத்தில் முன்பாகச் செல்ல, அதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த வீதி உலாவின் போது இருபத்தி இரண்டரை நாட்டார் பெருமக்கள் சுவாமியின் வாகனங்களை இழுத்து வந்தனர். வீதி உலாவின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

 

செய்தியாளர் / ஆனந்த்குமார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon