
நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகள் இணைந்தால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மேலும் வலுப்பெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். டெல்டா மாவட்டங்களில் சமீபத்திய மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறிய திருமாவளவன் தமிழக அரசு அறிவித்துள்ள 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் போதுமானதாக இருக்காது எனவும் கூறினார்.

சமூக நலத்துறை கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு, சமூக நலத்துறை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். சமூகநலத்துறை பொறுத்தவரையில் பட்ஜெட்டில் 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.95 கோடியில் பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காணொளி வாயிலாக முதலமைச்சர அடிக்கல் நாட்டினார்.

அரசியல் பின் பின்புலத்தை வைத்து விக்டோரியாவை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலஞ்சியம் பரிந்துரை செய்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புகார் கூறி வருகின்றனர். பரிந்துரையை திரும்ப பெற வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்திற்கு அவர்கள் கடிதமும் எழுதி இருந்தனர். இந்த நிலையில் அந்த கடிதத்தை ஏற்காமல் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள விக்டோரியா கவுரவியை கொலிஜியம் பரிந்துரையின் படி நீதிபதியாக நியமிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் கடிதம் […]

நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் வழக்குக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றி வாய்ப்பை பெற இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாஜக ஒருபோதும் ஆதரவளித்ததில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது என ஆய்வு செய்ய வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். களத்திற்கு செல் என்ற மகாத்மா காந்தியின் கூற்றுப்படி மக்கள் நலப் பணிகளை அதிகாரிகள் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று உணர்வோடு உழைக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு […]

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்த கருத்துக்கு அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக என்ன செய்ய வேண்டும் என்று பாஜக சொல்ல வேண்டியது இல்லை என்று அக்கட்சி ஐ.டி பிரிவு செயலாளர் ஐடி பிரிவு மண்டல செயலாளர் ராமச்சந்திரன் காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திமுகவை எதிர்த்து தனித்து நின்று வெற்றி பெற முடியாதவர் என விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகா பாஜகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று அதிமுக […]

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டிருப்பது குறித்து செய்தியாளர் எழுதிய கேள்விக்கு பன்னீர்செல்வம் எங்களைப் பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என தெரிவித்துள்ளார்.