
கரூர் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். இன்று நடக்கும் நலத்திட்ட உதவிகள் விழாவிற்காக அவர் காரில் சென்றார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சிறப்பான வரவேற்பளித்தனர். குளித்தலையில் தந்தையின் நண்பர் குடும்பத்தினரை கண்டு காரை நிறுத்தி முதலமைச்சர் நலம் விசாரித்தார். திருச்சியிலிருந்து குளித்தலை […]

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க, தமிழக அரசு ஒப்புதல் தராமல் எட்டு மாதங்களாக இழுத்தடித்து வருகிறது. வேலுமணியை காப்பாற்ற தமிழக அரசு முற்படுகிறதா என்ற சந்தேகத்தை இது கிளப்பி இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில், 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக, […]

ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக சட்டத்திருத்தங்கள் காலாவதி ஆகி விட்டதால் ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் கடந்த 27-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்து இருந்து கடிதம் எழுதுவது ஏற்புடையதாக இல்லை என்று […]

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர்கள் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பரபரப்பான சூழலில் பொதுக்குழு நடந்து முடிந்திருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரவு டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதையொட்டி டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இருவரும் பல்வேறு அரசியல் […]

அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தேறியது. வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறுவதால் அதனையொட்டி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு சாலைகளில் காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேரம் செல்லச் செல்ல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வானகரம் மதுரவாயில் […]

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை புரிகிறார். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஓபிஎஸ். ஈபிஎஸ் வாகனத்திற்கு பூத்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் தொண்டர்கள் நிரம்பி வழிகின்றனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவையும் பணியில் செல்வத்தையும் அதிமுகவை வழி நடத்த அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவர் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கட்சிக்கு ஒன்றிய தலைமை தேவை. அதற்கு இபிஎஸ் தகுதியற்றவர் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன […]