
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகளின் துணைக் கொண்டு சதி செய்தாலும் அதனை முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக திருநெல்வேலி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தாமிரபரணியின் வெள்ள நீர், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு 75 கிலோ மீட்டர் தூரம் திருப்பி விடப்படும். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி (வயது 60) ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம் தியாகி பழனிசாமி நிலையத்தில் வியாழக்கிழமை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் […]

நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை செல்கிறார். நான்கு வழி சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் செய்யப்பட்டுள்ளது. இதே போல வண்ணாரப்பேட்டை சந்தை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நெல்லை ராம் தியேட்டர் உடையார் பேட்டை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளும் கொங்குநாடு பாறை வழியை பயன்படுத்துமாறு […]

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்பொழுது நாம் தமிழர் நிர்வாகி அஜய் மேடையில் ஏரி பெரியாரை விமர்சித்து கோஷமிட்டத்துடன் அவரது சிலையை காலணியால் தாக்கினார். உடனடியாக அங்கிருந்த மக்கள் நாம் தமிழர் நிர்வாகியைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றி கழக கொடி கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி தமிழக கட்சி கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த தெருவில் மற்ற கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழக கொடி கம்பம் அமைக்க […]

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜா சாலை இருந்து மெரினா கடற்கரை வரை அமைதிப் பேரணியாக சென்று, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதில் கட்சித் தொண்டர்கள் பங்கேற்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பி.3,4,5 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்.8 ஆகிய 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டை பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது? என கேள்வி எழுப்பிய அவர், எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பாஜக கூட்டணி ஆட்சி உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும் நிதி அறிவிக்கப்படும் என்றால், இது ‘மத்திய பட்ஜெட்’ தானா என்று சாடியுள்ளார்.

தவெகவில் பணம்-சாதி பார்த்து பதவி வழங்குவதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 10 வருடமாக பணியாற்றிய எங்களை கட்சி அலுவலகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை. கட்சிக்காக உழைக்காமல் வீட்டில் தூங்கியவரை எழுப்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறுவழியில்லை என விஜய்க்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.