
சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் எட்டு சவரன் நகைகளை எடுத்துச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தேவி என்பவரின் வீட்டுக்கு கடந்த 19 ஆம் தேதி வீடு கேட்பது போல் சென்ற இரு நபர்கள் அவரை அறைக்குள் தள்ளிவிட்டு கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்துக்கொண்டு காலில் விழுந்து பண தேவைக்காக கொள்ளையடித்ததாக கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு தப்பி உள்ளனர். […]

காவல்துறையிடம் பிடிபடாமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என வீடியோ பார்த்து விட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே அந்த நபர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். ராமாபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்பொழுது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]

ஈரோடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம் சூளை அருகே நாட்ராயன், கமலா தம்பதியினர் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றனர். சுரேஷ் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாட்சாயன் சுரேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சமூகத்திற்கு வந்த வீரப்ப […]

செங்கல்பட்டு அருகே திருமணம் செய்ய மறுத்து தாக்கிய காதலனை போலீசில் சிக்க வைப்பதற்காக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி பெண் பொய் புகார் அளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திக்கொண்டு போய் சாலவாக்கம் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் பெண் தெரிவித்து இருந்தார். இது குறித்து விசாரித்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை […]

ஆந்திராவில் வீட்டுமனை கோரி மனு கொடுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கிராம வருவாய் அதிகாரிக்கு அந்த பெண் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் அக்கனா பள்ளி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் வசிக்கும் பெண் ஒருவர் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த பெண்ணுக்கு கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் அனுப்பிய whatsapp-ல் இலவச வீட்டு மனை தேவை என்றால் தாங்கள் தன்னோடு ஒரு நாள் உல்லாசமாக இருக்க […]

திருவாரூர் அருகே பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் விசிக பிரமுகர் கவியரசன். இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கவியரசனை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து கவியரசன் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து […]

பாலியல் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை விதித்து காந்திநகர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசாராம் பாபுஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி அருகே ரவுடியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குசாமி என்பவரின் கொலைக்கு பதில் வாங்கும் விதமாக கருப்பசாமி கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட […]

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் இரண்டு வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 38 லட்சம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்ற காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயும், மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஏ டி எம் மையத்திலும் ஒரே மாதிரி கொள்ளை நடந்திருப்பதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என […]