நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தங்கள் மீதான சிபிசிஐடி-யின் (CBCID) குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கைதான சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சேகரித்துத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் இனியும் மிகத் தீவிரமாக அம்பலப்படுத்தும் என்பதில் இம்மி அளவும் ஐயமில்லை! செய்தியை வெளியிட்டு ஒரு மாதம் கழித்து, அந்த நபர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்தலாம் என்று கனவு காண்கிறார். ஆனால், அவனது அந்தக் கனவு ஒருபோதும் நனவாகாது! அலிகானின் அனைத்து லீலைகளையும், அடாவடித்தனங்களையும் ஆணிவேர் […]
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது. 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி இரவில் அந்த நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது […]
திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிபாளையம் பிரிவு அருகே , கார்த்திக்(32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனது செல்போனை ஜெகதீஷ் வயது(27), என்ற நபர் வழிமறித்து பிடிங்கியதாகவும் தெரிகிறது. அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவலரிடம் ஒப்படைத்து, அனுப்பர்பாளையம் காவல் நிலையம் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில் செல்போனை பறித்த ஜெகதீஷ்(27) என்ற நபரிடமிருந்து சாம்சங் கைபேசி ஒன்று கைப்பற்றபட்டது. இதனையடுத்து அவா் மீது வழக்குப் […]
திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தம்பாளையம் டாஸ்மாக் பார் அருகே இன்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று , திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் சோதனை செய்த போது லோகேஷ்(26) என்ற நபர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத்தொடா்ந்து அவா் மீது வழக்கு பதிவு செய்து போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து […]
திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால் நாளொன்றுக்கு ரூ.585 சம்பளத்தைப் பெறும் முகமதுயாகத்அலி என்ற நபரின் அத்துமீறல்கள், பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளன. போலீஸ் வாகனத்தில் ரோந்துக்குத் துணையாகச் சென்றுவிட்டு, அதிகாலையில் காக்கிகள் கிளம்பியதும் களத்தில் இறங்குவதுதான் இந்த நபரின் முதல் வேலை. ஆம், சம்பளப் பணம் போதவில்லை என்ற அற்ப காரணத்துக்காக, ‘போலீஸ்’ என்ற […]
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது “குற்றம் குற்றமே” இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். பணிக்கு வரும் தொழிலாளர்களை அவமதிப்பது, மரியாதை குறைவாக பேசுவது போன்ற அடாவடிகளை செய்து வந்த சுகன்யா, திட்டத்தில் பணியாளர்களை தேர்வு செய்வது, ஊதியம் தருவதிலும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து வந்ததாக பயனாளிகள் நம்மிடம் கண்ணீரோடு கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தோம். “குற்றம் குற்றமே” இதழில் வெளியான […]
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார். கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை செய்து சென்றார். மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, போலீசாரால் சுட்டு […]
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி கவுன்சிலரின் கணவர் ராஜேந்திரன் (வயது 45). ஒர்க் ஷாப் வைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட 16-வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சிடையந்த சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராஜேந்திரனுக்கு உதவி செய்யும் […]






