
கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வீரையன் என்பவரைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில், திருவாரூர் கோர்ட், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ₹6,000 அபராதம் விதித்துள்ளது.

தெலுங்கானாவில் மட்டன் கறி செய்ய மறுத்த மனைவியை கணவர் அடித்தே கொன்றுள்ளார். மஹபூபாபாத்தைச் சேர்ந்த மலோத் கலாவதியிடம் அவரின் கணவர் நேற்றிரவு மட்டன் கறி செய்யவில்லையா என தகராறு செய்துள்ளார். இதையடுத்து 2 பேர் இடையே சண்டை ஏற்பட்டதில், மனைவியை அவர் அடித்து கொலை செய்து விட்டதாக கலாவதியின் தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

கர்நாடகாவை அதிரவைத்திருக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்காக 4% கமிஷனுக்கும் ரூ.50 லட்சத்துக்கும் ஆசைப்பட்டு ‘கடத்தல் குருவி’யாக நடிகை ரன்யா ராவ் மாறியதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வாகா திரைப்படத்தில் நடித்திருந்தார். துபாயில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கடந்த் 3-ந் […]

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என தொடர்ச்சியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில் எதிர்பாராத பல தகவல்கள் கிடைத்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த லோகநாயகி என்பவர் சேலத்தில் விடுதி ஒன்றில் தங்கி பயிற்சி மையத்தில் பணியாற்றி […]

பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளி நேரம் முடிந்தால் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேரத்தில் சிறப்பு […]

திருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். 53 வயது ஆட்டோ ஓட்டுனர் ரமேஷுக்கும் 35 வயதான அவரது இரண்டாவது மனைவி தீபாவிற்கும் இடையே இது தொடர்பாக அடிக்கடி சண்டை வரும் என கூறப்படுகிறது. வழக்கம்போல் சண்டையிட்ட அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

தொண்டி அருகே கிராம நிர்வாக உதவியாளர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. கொலைகார கும்பலை கைது செய்து, காவல்துறையினர் மாவுக்கட்டு போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் வசித்து வருபவர் காளிதாஸ் மகன் சுதாகர் (35). புதுப்பட்டினம் கிராம நிர்வாக உதவியாளராக உள்ளார். இவர், வழக்கம் போல் வேலைக்கு நேற்று 26 ஆம் தேதி மாலை […]

தங்கையை பற்றி ஆபாசமாக பேசிய காரணத்தால் நண்பர்கள் இருவரை அடித்து கொலை செய்த சகோதரன், இருவரின் உடலையும் பள்ளத்தில் போட்டு அதில் ஒரு லாரி மண்ணைக் கொட்டிய சம்பவம் கடலூரை உலுக்கியுள்ளது. கடலூரைச் சேர்ந்த அன்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் காணாமல் போனதாக அடுத்தடுத்து சில நாட்களில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இறந்தவர்களின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்த பொழுது அவர்கள் குவாரி ஓட்டுநர் பால்ராஜ் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. அவரை […]

மேற்கு வங்கத்தில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பற்றி கடந்த ஆண்டு நவம்பரில் 7 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்த போலீசார் 26 நாட்களுக்குள் விசாரணையை தொடங்கி குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் […]