
அமெரிக்காவில் விமானம் நடுவானில் பறக்கும் பொழுது பைலட் மயங்கியதால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரை இறக்கி உள்ளார். எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அளிக்கப்பட்ட வழிகாட்டுதலை கொண்டு விமானத்தை தரை இறக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பற்றி எதுவுமே தெரியாமல் சொன்னதை கேட்டு மட்டுமே விமானத்தை இயக்கி பயணி அசத்தியுள்ளார்.

அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையை நாளை மேற்கொள்ளவுள்ளது. இந்திய மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரிகாஃப்சன் தலைமையில் நடைபெறும். இந்த விசாரணையில் பறக்கும் தட்டுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பறக்கும் தட்டுக்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த வழக்கு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு இரத்தப்புற்று நோய் இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இது குறித்த உளவுத் துறை நிபுணர் கிறிஸ்டோபர் சமீபத்தில் கிடைத்த தகவல் படி ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார். இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பெரு நாட்டில் 330 அடி செங்குத்தான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் நோக்கி சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 330 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வட கொரியா நாட்டில் முதல் கோவிட் தொற்று பதிவானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்துள்ளது. அந்நாட்டு அரசு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் எதற்காக உடனடியாக முழு ஊரடங்கு என்ற கேள்வி எழலாம். ஆனால் முதலில் இருந்தே கொரொனா தொற்றை கையாள்வதில் வட கொரிய அரசு வினோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. கொரொனா தொற்று அதிகரிக்கும் பொழுது தன்னை பிற நாடுகளிடம் இருந்து தனிமைப் படுத்திக் கொள்ளும் வட கொரியா கடந்த இரு வருடங்களாக ஒரே ஒரு […]

இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து லண்டன் திரும்பிய பிறகு கடந்த 7ஆம் தேதி குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நோய் இறுதியில் மக்களிடையே பரவாது […]

நைஜீரியாவில் சக மாணவர்களால் பள்ளி மாணவி கல்லால் அடித்து தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள சோடா மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகள் வாட்ஸ்அப் குழுவில் மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு பிரிவை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அதே பிரிவை சேர்ந்த சக மாணவர்கள் அந்த மாணவியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் […]

பூமியை நோக்கி மிகப்பெரிய சிறுகோள் ஒன்று வந்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறுகையில் ராட்சத விண்கோல் செல்லும்போது மே 16 அன்று அதிகாலை 2.48 மணிக்கு நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருநாகம் ஒன்று கண்ணாடி டம்ளரில் இருந்து தண்ணீர் பருகும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. தென் கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட நாகப்பாம்பு மிகவும் விஷத்தன்மை உடனிருந்த பாம்புகளில் ஒன்றாகும். இந்த இனத்தை சேர்ந்த கருநாகப்பாம்பு கோடை வெயிலுக்கு இதமாக கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வருகிறது. ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தாவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது கோடைகாலம் என்பதால் மீண்டும் வைரலாகி வருகிறது.