
லண்டனின் ஹீத்ரோவில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. அது பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு சொந்தமான ‘போயிங் 787 டிரீம்லைனர்’ ஆகும். நடுவானில் எரிபொருளை வெளியேற்றிய புகையுடன் பறந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே அகமதாபாத்தில் போயிங் விமானம் விழுந்து நொறுங்கியதில் 274 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் ஹாங்காங்கிற்கே சென்றது. இது ‘போயிங் 787’ என்பதும், கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதும் விமானி MayDay அறிவித்து தரையிறக்கியதும் தெரியவந்துள்ளது. குஜராத்தில் ஏர் இந்தியா 171 விமானம் விபத்தில் சிக்கிய அதிர்ச்சி அடங்குவதற்குள் மீண்டும் போயிங் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. விறுவிறுப்பாக நடந்த 3 ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 202 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா வீரர்களில், ரியான் ரிக்கில்டன் 6 ரன்களிலும், […]

ஒரு அற்புதம் என்று சொல்லுமளவுக்கு, வியாழக்கிழமை நடந்த பயங்கரமான விமான விபத்தில் ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். உயிர் பிழைத்த ஒரே நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் விஸ்வாஸ் குமார் ரமேஷ் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அகமதாபாத் காவல் ஆணையர் ஞானேந்தர் சிங் மாலிக், ’11A’ இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி விபத்தில் உயிர் பிழைத்ததை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். குஜராத் அரசு வட்டாரங்கள், “தற்போது […]

ஈரானின் அணு ஆயுத நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாகவும் ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த […]

இஸ்ரேலிய கடற்படை தடையை மீறி காசாவை அடைய முயன்ற உதவிப் படகை இடைமறித்து, கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிற ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேலுக்குத் திருப்பிவிட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி தெரிவித்துள்ளது.பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஃப்ரீடம் ஃபுளோட்டிலா கூட்டணி (FFC) இயக்கும் UK கொடியிடப்பட்ட மேட்லீன் (Madleen) படகு, ஜூன் 6 அன்று சிசிலியில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினமே காசாவை அடைய நம்பியிருந்தது. அப்போது இஸ்ரேலிய இராணுவம் படகை இடைமறித்ததாக அந்த அமைப்பு […]

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டில் சிந்தூர் மரக்கன்றை நட்டார். 1971 இந்தியா – பாக். போரின் போது, வீரத்தின் முன்மாதிரியாக அமைந்த குஜராத்தின் கட்ச் பகுதி பெண்கள் இந்த மரக்கன்றை தனக்கு பரிசளித்ததாகவும், நமது நாட்டு பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் வலுவான அடையாளமாக இந்த செடி இருக்கும் என்றும் பிரதமர் உணர்வு பொங்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், NB.1.8.1 கொரோனா சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இப்போது பருவகால காய்ச்சலும் அதிகரித்து வருவதால், எது கொரோனா, எது சாதாரண காய்ச்சல் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன. இதனால், காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் வரும் 15-17 தேதிகளில் நடக்கவுள்ள G7 உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்கப்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. சீர்குலைந்த கனடாவுடனான இருதரப்பு உறவு, பாதுகாப்பு காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் G7 மாநாட்டில் PM மோடி பங்கேற்காமல் போவது இதுவே முதல்முறையாக இருக்கும். ஆனால், இந்தியாவுக்கு முறைப்படியான அழைப்பை கனடா அரசு இதுவரை அனுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.