சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பா.ஜ.க நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “நெருக்கடி கொடுப்பது அவர்களுடைய (பா.ஜ.க) பழக்கம் . நெருக்கடியை எதிர்கொள்வது எங்களுடைய வழக்கம்; விஜய் திரைப்படத்தின் தனிக்கையை நிறுத்திவைத்திருப்பது அவர்களுடைய வக்கிரமான அரசியல். பராசக்திக்கு அனுமதி கொடுத்தவர்கள் ஜனநாயகனுக்கு கொடுக்கவில்லை. அதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். ஆகவே, நெருக்கடிகள் வரலாம். அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் எங்கள் தலைவர் விஜய்க்கு இருக்கிறது” என்று கூறினார்.
தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தி.மு.க-வில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் ஒதுக்கீடு செய்ய உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லியிருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதலான தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் வற்புறுத்தி இருக்கிறோம். அவர்கள் தலைமையோடு பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என்ற முறையில் பேச்சுவார்த்தை குழு தெரிவித்து இருக்கிறது. […]
ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி த.வெ.க-விற்கு தெரிவித்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. அதாவது, 8 மாதங்களாக த.வெ.க-வோடு பயணித்தோம் அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதலமைச்சரின் போலி கண்ணீர் அ.தி.மு.க-விற்காக இருக்கிறது. 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் செய்த சாதனைகளை சொல்லாமல் அ.தி.மு.க-விற்காக நீலி கண்ணீர் வடிக்கிறார். தமிழ்நாட்டில் மக்கள் திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் 3 வாரங்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து இன்று மதியத்திற்குள் தகவல் தெரிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் […]
சென்னை சேத்துப்பட்டில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் கடந்த ஒரு மணி நேரமாகப் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நின்று கொண்டிருப்பதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் தினமும் இதே போன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை நீடிப்பதால், பணிக்குச் செல்வோர் மற்றும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.க-வுக்கு 5 இடக்களை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பா.ஜ.கவின் வக்கிரமான அரசியல் என்று நாஞ்சி சம்பத் விமர்சித்துள்ளார். நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் விஜய்க்கு உள்ளது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலை த.வெ.கவிற்கு சாதகமாக உள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் விஜய் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.






