
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்து அரங்கில் வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாகவும் […]

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தோழியின் தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காண்டக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மகளுடன் பள்ளியில் படிக்கும் மாணவி அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பயன்படுத்தி சுரேஷ் தனது தோழியிடம் தவறாக நடந்துள்ளார். சுரேஷ் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

திருப்பத்தூர் அருகே உயிரிழந்த மனைவிக்கு ஆறு அடிக்கு சிலை வைத்துள்ளார் அவரது கணவர். கோவில்பட்டி திருப்பத்தூர் அடுத்த மாங்கனூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணி – ஈஸ்வரி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்தாண்டு மனைவி ஈஸ்வரி உயிரிழந்தார். 35 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியின் நினைவாக அவருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார் கணவர் சுப்பிரமணி. அத்துடன் கோயிலில் தினமும் இரண்டு வேளை பூஜை செய்து வணங்கி வருகிறார். சுப்பிரமணியனின் இந்த செயல் அந்த பகுதி […]

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும், கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். சுமார் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்த லவ் டுடே திரைப்படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதன் என்ன படத்தை இயக்கி, நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. ஆனால், தற்போது அவர் இயக்கப்போவதில்லை, நடிக்க மட்டும் தான் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளாராம். […]

தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்திருந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா. தெலுங்கில் நன்கு பிரபலமான இவர் அங்கு சில படங்களே நடித்துள்ளார். நிஹாரிகா கொனிடேலா தனது காதலர் சைதன்யா ஜொன்னலக்டாவை டிசம்பர் 2020ம் ஆண்டு உதய்பூரில் படு பிரம்மாண்டமாக நிகழ்வுகளுடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடத்தில் இருந்து இருவருக்கும் மன கசப்புகள் ஏற்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான் […]

சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். தனது வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், uncut diamonds உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இது பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனர். வீட்டில் பணியாற்றும் வேலைக்காரர்கள் மீது தான் ஐஸ்வர்யா சந்தேகம் தெரிவித்து இருந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா […]

திருமுல்லைவாயில் அருகே நேற்று மாடியில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் வெங்கடாசலம் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அபிராமியின் தம்பி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரவின்குமார்- அபிராமி தம்பதியினர் பின்னர் மொட்டை மாடிக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தனர். அபிராமி மொட்டைமாடி சுற்றுச்சுவற்றில் ஏறி அமர முயற்சித்த பொழுது எதிர்பாராதவிதமாக தவறி […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது உடல் முன் மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ராஜேந்திரன் தனது பிரவீன் மகன் பிரவீனுக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்டு மார்ச் 27ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார். திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணிய தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடலின் முன் மணமகளின் சம்மதத்துடன் மகன் பிரவீன் திருமணம் செய்து […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்து அதிகாரியாக இருந்த சிவகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டனர். ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பொழுது முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக ஆய்வு என தகவல் வெளியாகியுள்ளது.