
‘திருச்சி திருவரங்கம் தொகுதி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளரே’ எனக் குறிப்பிட்டு விஜய் பிறந்தநாளுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, நின்றால் ஜெயிக்க வைப்போம் என்று அம்மாவட்ட தவெகவினர் கூறுகின்றனர். ஏற்கெனவே மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய இடங்களில் விஜய் களமிறங்குகிறார் என தகவல்கள் பரவின.

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கர்நாடகா – தெலுங்கானா – ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த […]

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தனது மனைவி ராதா மற்றும் குடும்பத்தினருடன் பழநி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று, ஆனந்த விநாயகர், முருகப் பெருமான், போகர் சன்னதிகளில் வழிபட்டார். திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரை வரவேற்றனர். தரிசனத்திற்குப் பிறகு, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குத் தாராபுரம் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுகவில் கடந்த சில நாள்களாக நிர்வாகிகளை நீக்கி, புதியவர்களை நியமித்து இபிஎஸ் அதிர்ச்சி அளித்து வருகிறார். அந்த வரிசையில், நீலகிரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் பிரிவு அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் பி. ஜெயராமன், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் டி. சந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி.ராஜேஷ், ஜெகதளா பேரூராட்சி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மனப்பாக்கத்தில் 3.15 கி.மீ. நீள மேம்பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்ட இரண்டு ‘ஐ’ வடிவ கான்கிரீட் கர்டர்கள் (தண்டவாள டிராக் சரிந்து விழுந்து) வியாழக்கிழமை (ஜூன் 12, 2025) இரவு விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில், கீழே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். நள்ளிரவு வரை, காவல்துறை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் கர்டர்களை அகற்றும் பணியிலும், அடையாளம் தெரியாத நபரின் […]

நீலகிரி மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய […]

பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த ரூ.770 சம்பளம், தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்குதல் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 4-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் […]

ஒவ்வொரு செங்கலாக கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன என்று அன்புமணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் இருந்து வருகிறது. சமீபத்த்தில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்று […]

முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஜூலை 7-ம் தேதி (ஞாயிறு) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை, பழநி, மதுரை, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட கோயில்களில் இருந்து 300 பேர் கொண்ட குழுவினரை ஜூலை 1 முதல் 8 வரை பணியில் ஈடுபடுத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.