
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் குளிக்கும் போது வழுக்கி விழுந்த இளைஞரின் உடல் முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன்பு விழுந்த இளைஞர் பாறை இடுக்கில் சிக்கிய நிலையில் சடலமாக மிதந்துள்ளார். இந்நிலையில் வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் இளைஞர் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பேனர் விழுந்து மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனுமதித்த விளம்பர பலகைகளை அகற்ற காவல்துறை உள்ளாட்சி அமைப்பு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது எனவும் கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி உறுதி அளித்துள்ளார்.

கோவையில் இருந்து மதுரை செல்லும் நபர் ஒருவர் நடுரோட்டில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேரு உள் விளையாட்டு அரங்கம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அருகே அதிக மதிபோதையில் நபர் ஒருவர் நடுரோட்டில் படுத்துறங்கியுள்ளார். முதலில் அவர் எழுந்து விடுவார் என பலரும் எழுப்பிய நிலையில் எழுந்திருக்காமலேயே இருந்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் தலையில் ரத்த காயங்கள் இருந்ததாகவும் அதிகம் மது போதையில் இருந்ததாலும் அவரை நெருங்க […]

கோவையில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறும் இடத்தில் குவிந்த திமுகவினருக்கு பிஸ்கட், குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. மின்துறை அமைச்சர் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவரது கட்சியினர் அவரது வீட்டில் முன் குவிந்து வருமானவரித்துறை சோதனைக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வசதி செய்யப்பட்டிருந்தன. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச […]

கோவையில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து பயணம் செய்த கல்லூரி மாணவியுடன் நடத்துனராக பணிபுரியும் ஞானசேகர் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த மாணவி தனது நண்பர்களை வரவழைத்து கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இறங்கிய பொழுது பேருந்து வேகமாக புறப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவி நண்பர்கள் […]

கோவை நகர பேருந்து நிலையத்தில் உள்ள அலைபேசி கடையில் பாம்பு புகுந்துள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின் பக்கத்திலிருந்து மேசையின் மீது சென்றுள்ளது. பாம்பு வருவதை கூட கவனிக்காத கடைக்காரர் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் காலில் ஏதோ ஊறுகிறது என பார்த்தபொழுது பாம்பு இருப்பதை கண்டு பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார். இது தொடர்பாக கண்காணிப்பு காட்சி வெளியாகியுள்ளது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ். இவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்கின் விசாரணைக்காக கோவை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். காவல் துறையினர் அபிலாஷை விசாரணைக்காக கைது செய்து அழைத்து சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் பெண் கவுன்சிலர் ஒருவர் மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பென் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. சட்டத்தின் படி மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரது பதவி பறிபோகும். இந்த நிலையில் மாமன்ற கூட்டத்தில் நிவேதா கலந்து கொள்ளாதது குறித்து உரிய விளக்கம் […]