
கோவை ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் தரும் இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. மூன்றாவது நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் முகக்கவசம் வழங்குதல் அல்லது எடையை தெரிந்து கொள்ளலாம். இந்த இயந்திரம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க, தமிழக அரசு ஒப்புதல் தராமல் எட்டு மாதங்களாக இழுத்தடித்து வருகிறது. வேலுமணியை காப்பாற்ற தமிழக அரசு முற்படுகிறதா என்ற சந்தேகத்தை இது கிளப்பி இருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில், 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக, […]

கோவை சிங்காநல்லூரில் மசாஜ் உரிமையாளரை இளைஞர்கள் சிலர் வீடு புகுந்து வெட்டியது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசாஜ் செய்ய வேண்டும் எனக்கூறி வீட்டிற்கு வந்த இளைஞர்கள் உரிமையாளரின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூரில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி பயமுறுத்தி விடப்பட்டதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். நேரு நகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பார்த்த நபர் ஒருவர் சூலூர் பள்ளி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வரும் படியும் அங்கு வந்து பைக்கை வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். இதனை நம்பி அவர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து […]

கோவை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானை அங்கிருந்தவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கியதில் நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் தடுக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். கோயம்புத்தூரில் உள்ள நிர்மல் மாதா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த சௌமியாவிற்கு மதியம் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த மாணவியை சங்கீதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி சௌமியா உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் அளித்தனர். மாணவிக்கு ஏன் மயக்கம் ஏற்பட்டது? பெற்றோருக்கு […]

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் கோவை முதல் சீரடி வரை இன்று தொடங்கப்படும் தனியார் ரயில் சேவைக்கு இரு மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாமானியர்களின் பொருத்தமான தொடர் வண்டிப் போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தனியார் தொடர்வண்டி இயக்கப்பட உள்ளது. கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் தனியார் தொடர்வண்டி தண்டவாளம் நடைமேடை என அனைத்தும் இந்திய தொடர்வண்டி துறைக்கு சொந்தமானது. ஆனால் […]

திருப்பூர் மேயர் பதவிக்கு 49வது வார்டு கவுன்சிலரும், திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளருமான தினேஷ்குமார், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர் மேயராக, கடந்த மார்ச் முதல் வாரத்தில் தினேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பூருக்கு, 42 வயதே நிரம்பிய இளம் வயது மேயர் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சுறுசுறுப்பானவர், சர்ச்சையில் சிக்காதவர், மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால், இனி திருப்பூர் மாநகராட்சி ஒளிரும் என்று மக்கள் நம்பினர். அதேபோல், மேயர் தினேஷ் குமாரின் செயல்பாடுகளும் ஆரம்பத்தில் […]

கோவை மாவட்டம் அருகே ஓடும் பேருந்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் சுந்தரம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி. அழகு கலை நிபுணரான இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவதற்காக பொள்ளாச்சியிலிருந்து அரசு பேருந்தில் ஏறி புறப்பட்டுள்ளார். ஓட்டுனர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசக்தி ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த படிக்கட்டு பக்கம் வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறிய அவர் பேருந்தில் […]