
கோவையில் மது போதையில் கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டி பயிலும் ஆறு மாணவர்கள் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு காரில் வேகமாக திரும்பி சென்ற பொழுது சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஸ்ரீ மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் ஒருவன் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விவசாய கிணற்றில் இருந்த முதலையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி என்பவர் தோட்டத்தில் பாசன கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்தவர்கள் மோட்டார்களை கொண்டு கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினார். பின்னர் கிணற்றுக்குள் கூண்டு வைத்து முதலையை […]

கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் புகார் எழுந்துள்ளது. ஆர்விஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவிகள் ராகிங் செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் பேரில் மூன்று சீனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் பள்ளி மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி பேசிய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சாவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பேட்மிட்டன் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த அருண் என்பவரிடம் அதே பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். பயிற்சியாளாரும் மாணவியிடம் நட்பாக செல்போனில் whatsapp வாயிலாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவியின் ஆபாச […]
கோவை இளங்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த தன்னை இளைஞர் ஒருவர் நகைகளை திருடி சென்றதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் மகனை இழந்து அந்த 47 வயது பெண்ணின் வீட்டிற்கு காவி வேட்டி அணிந்து வந்த இளைஞர் இறந்த மகனின் ஆவி வீட்டில் உலாவுவதாகவும் அதை எடுக்காவிட்டால் கணவரையும் விரைவில் கொன்று விடும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. தனது முகத்தை உற்றுப் பார்க்கும்படி கூறிய நபரிடம் தன்னை அறியாமல் […]

கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கோவையில் அரசு பேருந்தின் படியில் அமர்ந்து பயணம் செய்த போதை இளைஞர்களை தட்டி கேட்ட ஓட்டுநரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மதுரையில் அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்பொழுது அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அந்த பேருந்தில் பயணித்துள்ளார். அப்பொழுது அதீத போதையில் மூன்று இளைஞர்கள் பேருந்தில் […]

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாய குட்டையில் சிக்கிய ஆண் யானை குட்டி ஒன்று மீட்கப்பட்டது. ரோந்து பணியின் போது யானை குட்டியை வனத்துறையினர் கண்டறிந்தனர். 40 வயது 4 வயது மதிக்கத்தக்க யானை கூட்டியை வனத்துறை ஊழியர்கள் மீட்டனர். வனப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள குட்டையில் யானை சிக்கியது. யானை குட்டியை தாய் யானையுடன் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஸ்நோக் காய்ச்சல் பரவி வருவதால் பொது இடங்களில் முக கவசம் அணியும்படி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவுரைத்தல்களை வெளியிட்டுள்ளார். காய்ச்சல், உடல் வலி, தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகின்றன. பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்களில் குணமடைந்து விடுவர். இந்த […]

கோவையில் படம் பார்க்க டிக்கெட் வழங்காமல் திரையரங்கு நிர்வாகம் அலைக்கழித்ததால் நரிக்குறவர் இன மக்கள் கைக்குழந்தைகளுடன் காத்திருந்த அவலம் அரங்கேறி உள்ளது. கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த நாற்பது பேர் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளனர். காலை 11 மணிக்கு காட்சிக்கு டிக்கெட் இல்லை. எனவே இரவு காட்சிக்கு வரும் வருமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதியம் மூன்று மணி வரை காத்திருந்த நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு […]