
கோவையில் உள்ள வஉசி மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு வயது 54. இவர் கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தார். இதற்கிடையே இவர் இன்று கோவை வஉசி மைதானத்தில் […]

கோவை மாவட்டம் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் ஜார்கண்டை சேர்ந்த சஞ்சய் என்பவர் காட்டு எருமை தாக்கியதில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டெருமைகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு வனத்துறைக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் அட்டைப்பாடியை சேர்ந்த மருதர் அவரது மனைவி மஞ்சு. இவரது குழந்தைக்கு பிறந்தநாள் சான்றிதழ் பெற மருதர் மற்றும் மஞ்சு 25ஆம் தேதி கோவை வந்தனர். பின்னர் வேறு ஒரு பேருந்து மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அலுவலகம் வருவதற்கு முன்பே மஞ்சு இறங்கி படிக்கட்டுக்கு வந்துள்ளார். பேருந்து ஆட்சியர் அலுவலக புதிய […]

கோவை ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை தடுக்க சதி நடப்பதாக அதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். விழாவின்போது, அங்கு ஏற்படும் ஒளியும் ஒலியும், வன விலங்குகளை பாதிப்பதாக உள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், சிவராத்திரி கொண்டாட்டங்கள் வனப்பகுதிக்குள் நடைபெறுவதில்லை என்றார். மேலும், சிவராத்திரி விழா மக்களுக்கு அவசியம் என்றும் அவர் பேசினார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ் குமார்- புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு சுமார் 4 மாத ஆண் குழந்தை உள்ளது. சக்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறக்கும் பொழுதே அந்த குழந்தைக்கு ஆசனவாயு முழுமை அடையாமல் பிறந்துள்ளது. எனவே அந்த மருத்துவமனையில் மலக்குடலை மட்டும் வெளியே எடுத்து தற்காலிகமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். நான்கைந்து மாதங்கள் கழித்து மலக்குடல் ஆசன வாயு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த […]

கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பயந்து போன அவரது பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் மறுநாள் காலை சிறுமி வீடு திரும்பி உள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் சிறுமியிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதில் […]

கோவையில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அண்ணனும் தங்கையும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தங்கை உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சம்சத் பேகம் என்ற அந்த பெண்ணும் அவரது அண்ணன் இப்ராஹிம் கோவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் ஷம்சத் பேகம் உயிரிழந்த நிலையில் இப்ராஹிம் ஷா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவையில் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த பெண் உடலை கைப்பற்றி போலீசார் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பணியில் இருந்த மேலாளர் வெங்கடேஷிடம் தாங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் தங்கள் பெயர் இப்ராஹீம் பாதுஷா, சம்சாத் பேகம் என சொல்லி அறையை புக் செய்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த ஆண் பணம் எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் ஹோட்டலுக்கு திரும்பவில்லை. மேலும் […]

கோயில் விழாக்களில் யானைகளைப் பயன்படுத்த கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாகக் கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகக் கேரளாவில் கோயில் விழாக்களில் அடுத்தடுத்து யானைகள் தாக்குதலுக்கு ஆளாகி மனித உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கோழிக்கோட்டில் நடந்த ஊர்வலத்தின் போது யானைகள் மிரண்டு ஓடியதில் 2 பெண்கள் உட்பட மூவர் பலியானது கவனிக்கத்தக்கது.