சிறுமியை ரேப் செய்த கொடூரன் கைது!
திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று ஒருவர் ரேப் செய்த வீடியோ வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று அணிந்த அதே உடையில், ஆரம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலேயே அந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். முதற்கட்ட விசாரணையில் அவன் மேற்குவங்கத்தை சேர்ந்தவன் எனத் தெரியவந்துள்ளது.





