தொண்டை வலி குணமாக துளசியின் குணம் உதவும்!

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து காய்ச்சவேண்டும். அதில் வேளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தினமும் இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

 

நரம்பு ,இதயம் ஆகியவற்றை பலப்படுத்தும் மற்றும் சக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிப்படைந்தவர்கள் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை உட்கொண்டால் நீர்வடிதல் குணமாகும். தூய்மையான தாய்ப்பாலில் இரு துளியை கண்களில் விட்டால் கண் சூடு கண் எரிச்சல் ஆகியவை குணமாகும்.

 

மிளகு, ஓமம் ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப் புகை பிடித்தால் மூக்கடைப்பு நின்றுவிடும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் உட்கொள்ள வேண்டும்.

 

இதனால் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனீரில் எலுமிச்சைபழ சாற்றையும் சமஅளவு உட்கொண்டால் சளி, இருமல் ஆகியவை குணமாகும்.


Leave a Reply