மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவர் சுப்பையா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளதாகக் கூறி அதன் தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்ததுடன், குற்றவாளிகள் 9 பேருக்கான ஆயுள் தண்டனையை தற்போது இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.





