ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை..!
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இலங்கை இளம் பெண்ணுக்கு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயில் கழிவறை சென்று திரும்பிய பெண்ணிடம் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து ஆத்திரமடைந்த இரு இளைஞர்கள் பெண்ணை கழிவறையில் தள்ளியுள்ளனர். அங்கு வைத்து அவருக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





