பருவமழை முன்னெச்சரிக்கை: அனைத்து துறைகளும் தயார்நிலையில் இருக்க முதல்வர் விஜய் உத்தரவு
பருவமழை காலத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து துறைகளும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு பேரிடர் சூழலையும் உடனடியாக எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்திய அவர், அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மீட்பு உபகரணங்கள் மற்றும் மீட்புப் படையினர் எப்போதும் தயார்நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.






