--- --:--:-- --

விடிய விடிய நடந்த மருதூர் மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா..!

யிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ஆண்டுத் தீமிதி திருவிழா நேற்று இரவு மிகுந்த பக்திப் பெருக்குடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

 

நேற்று காலை முதலே தொடங்கிய இந்த ஆன்மீக வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் வண்ணமயமான மலர் அலங்காரங்களுடன் மகா தீபாராதனை செய்து வழிபட்டனர்.

 

 

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நள்ளிரவில் நடைபெற்றது; வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தபடி அலகு காவடி மற்றும் மயில் காவடி ஏந்தி, தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி அம்மனின் அருளைப் பெற்றனர்.

Leave a Reply

Right Menu Icon