கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தெரிவித்தார்.
அமலாக்கத் துறை (ED) வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.





