நாங்குநேரி விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆதரித்து மு க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஜெயலலிதா இறந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். பதவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழக அரசின் இத்தேர்வை எதிர்க்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார் உள்ளாட்சி தேர்தலை வேண்டுமென்றே நடத்தாமல் இருந்து வருவதாகவும் முகஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு வாக்காளர்களை விஜயகாந்த் கேட்டுக்கொண்டார் .
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயண ஆதரித்து அமைச்சர் ஆர் வி உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரச்சாரத்திற்கு பின்னர் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக அரசின் மீது திமுக கூறும் குற்றச்சாட்டுகள் ஒருபோதும் எடுபடாது என்றும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் கூறினார்.
நாங்குநேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜநாராயணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் செய்தது தவறு திமுக-அதிமுக 2000 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.