தீக்கிரையான நான்கு ரெயில் பெட்டிகள்- ஹரியானா !!
ஹரியானா மாநிலம் ரோஹத் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது.
தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர்.
அதற்குள் நான்கு பெட்டிகள் எரிந்து நாசமாகின. மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.





