ரத்த காயத்துடன் சாலையில் கிடந்த முதியவர்..!
சென்னை பெரிய மேடு சிக்னல் அருகே ரத்த காயத்துடன் சாலையில் கடந்த முதியவரை மீட்டு முதலுதவி அளித்த பெரிய மேடு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அந்த பகுதியில் இருந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சோனை தலைமையிலான போலீசார் ரத்தக்காயத்துடன் கிடந்த முதியவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.





