திருமணமான பெண்ணை பிடித்து வலுக்கட்டாயமாக அசிங்கம் செய்ய முயன்ற நபர்..!
திருத்தணி அருகே திருமணமான பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திராவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தன் தாத்தாவுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவர் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தடுக்க வந்த முதியவரை அவர் தாக்கி விட்டு தப்பி ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குபேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





