தாய், மகனை விரட்டிய தெரு நாய்..பறிபோன உயிர்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.ஆர்.நகர் வழியாக வினோத் என்பவர் 63 வயதான தனது தாய் சரஸ்வதியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்து தெருநாய்கள் ஒன்று சேர்ந்த விரட்டியதாக கூறப்படும் நிலையில் கீழே விழுந்த சரஸ்வதி தலையில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.





