மின் பழுதுகள் – 15,058 மின்பணியாளர்களை நியமிக்க விஜய் உத்தரவு
தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்தது. மேலும், மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மின் பழுதுகளை சரி செய்ய 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து மின் பணியாளர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.





