தூக்க நேர்த்தியில் நடந்த சோகம்.. அந்தரத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை..பதறிய பெற்றோர்..!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ஏலன்குளம் கோயிலில் நடைபெற்ற தூக்க நேர்த்தி திருவிழாவில் 15 அடி உயரத்திற்கு துவக்கப்பட்ட 10 மாத குழந்தை தூக்கக்காரரின் கையில் இருந்து தவறி கீழே விழுந்தது.
காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி தம்பதியினர் இந்த கோயிலில் தூக்க நேர்த்தி நடத்திக் கொடுப்பதாக கூற வேண்டுதல் செய்கிறார்கள். அம்மன் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு தூக்க நேர்த்தியை நிறைவேற்றுகின்றனர்.





