குரூப் 4 தேர்வு முடிவில் மேலும் ஒரு சர்ச்சை..!
குரூப் 4 தட்டச்சர் தேர்வில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து 450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. 2,500 தட்டச்சு பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் சங்கரன்கோவிலில் மட்டும் 450 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே நில அளவையர் தேர்வு முடிவுகள் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களும் குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





