தான் 3 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்..! நடிகையின் குற்றச்சாட்டு..!
பாலிவுட் நடிகை பாத்திமா சனாஷேக் தான் 3 வயது குழந்தையாக இருந்த போதே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். ஔவை சண்முகி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் கமல் ஹாசனின் மகளாக அறிமுகமான பாத்திமா சனாஷேக் டங்கல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் திரைத்துறைக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த தான் பல்வேறு பாலியல் இம்சைகளையும் எதிர் கொண்டதாக குறிப்பிடுகிறார். பாலியல் உறவின் மூலமே திரைப்பட வாய்ப்புகளை பெற முடியும் என பலர் தன்னை நிர்பந்தித்ததாக ஃபாத்திமா கூறியுள்ளார்.






