குற்றம் நிரூபிக்கப்படும் வரை அப்பாவி என பாஜக உணர்ந்தது மகிழ்ச்சியே..!
சட்டப்பூர்வமாக குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் அப்பாவி என பாஜகவின் மாணவர் பிரிவு காலதாமதமாக உணர்ந்திருப்பது மகிழ்ச்சியே என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கிய சுப்பையா, மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம் குற்றம் நிரூபணம் ஆகும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை என்ற கண்டுபிடிப்பு தாமதமானாலும் வரவேற்கத்தக்கது என்றும் புதிய சட்ட ஆலோசகரை பாஜகவின் இளைஞர் அமைப்பு நியமிப்பது போல் தெரிய வருவதாகவும் கேளியாக விமர்சித்துள்ளார்.






