சுர்ஜித் இறந்ததால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடாத ராகவா லாரன்ஸ்

சுர்ஜித்தை இழந்த பெற்றோர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குழந்தை சுர்ஜித் உயிரிழந்த சோகத்தை கேட்டு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை என தெரிவித்துள்ளார்.

 

ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கிவிட்டு சென்றுவிட்டான் சுர்ஜித் எனக் கூறியுள்ளார். சுர்ஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளை ஆகிவிட்டான் என குறிப்பிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அதுபோல இந்த தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

 

அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் என பெயரிட்டு வளர்க்கும் படி சுர்ஜித்தின் பெற்றோரிடம் கேட்டுக் கொள்வதாக ராகவா லாரன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

அப்படி குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் தானே குழந்தையை தத்தெடுத்து கொடுக்கிறேன் என்றும் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் ராகவாலாரன்ஸ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply