“சுஜித்தின் மூச்சுச்சத்தம் ஒரு தந்தை ஸ்தானத்தில் தன்னை இயங்க வைத்தது”:விஜயபாஸ்கர்

சுர்ஜித்தின் மூச்சு சத்தம் ஒரு தந்தை ஸ்தானத்தில் தம்மை இயங்க வைத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு சென்று மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வந்தார்.

 

இதனிடையே சுர்ஜித் உயிரிழந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். தான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாக நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் தன்னுள் இன்னும் ஒலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் உணவின்றி உறக்கமின்றி இரவு பகலாக இமை மூடாமல் உழைத்தோம். இப்படி தம்மை புலம்பி அழ விடுவாய் என நான் எண்ணவில்லை என்றும் தெரிவித்த அவர் கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். ஆனால் கல்லறை இருட்டாய் மாறும் என எண்ணவில்லை.

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க காத்திருந்தேன் ஆனால் மார்ச்சரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்து கிடைக்கிறது என அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார். 85 அடி ஆழத்தில் தான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் தன்னை மீட்புப்பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் துயரத்துடன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply