சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில்: ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தவெக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை. அவர்கள் அழைப்பு விடுத்தால் மட்டுமே ஆதரவு அளிப்பதா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகப் பேச முடியும். அதன் பிறகு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூடி இதற்கான முடிவை எடுக்கும், என்றார்.