தண்ணீர் தான் குடித்தேன்…சத்தான பால் குடித்தேன் என்று போட்டுவிடாதீர்கள்..!
ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திடீரென இருமல் வந்துள்ளது, அப்பொழுது பிரச்சார வாகனத்தில் இருந்து தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளார், தண்ணீர் குடித்துவிட்டு பேசிய முதலமைச்சர் இது வெறும் தண்ணி தாம்பா டிவி காரங்க வேற மாதிரி செய்தி போடாதீங்க என்று கலகலப்பாக பேசியுள்ளார்.
சத்தான பால் எதுவும் குடிக்கிறார் என்று போட்டு விடாதீர்கள் வெறும் தண்ணீர்தான் என்று பேசிய கூட்டத்தில் கலகலப்பு ஏற்படுத்தியுள்ளார்.






