ஜூன் 29, 30-ல் விஜய் தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த இருநாள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், புதிய அரசின் முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் நேரடியாக விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வார் என்பதால், இந்த மாநாடு தற்போதைய நிர்வாக வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.





