பயிர்க்கடன் தள்ளுபடி கோரி சாட்டையால் அடித்துக்கொண்டு விவசாயிகள் போராட்டம்; தமிழக அரசுக்கு கண்டனம்
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.





