--- --:--:-- --

பள்ளி மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்..!

1

வேலூர் அருகே ரங்காபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவனை தாக்கியதில் மாணவருக்கு வாயில் லேசான காயம் ஏற்பட்டது. சுரேஷ் என்பவரின் மகன் ஆகாஷ். தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.

 

பள்ளியில் இருந்து அழைத்து செல்வதற்காக சித்தப்பா சதீஸ் என்றபோது மாணவன் முக கவசம் அணிந்திருக்கிறான். அதனை நீக்கிவிட்டு பார்த்தபோது வாயின் மேல் பகுதியில் ரத்தக்காயம் இருப்பதை கண்டு விசாரித்துள்ளான்.

 

இது குறித்து விசாரிக்க தலைமை ஆசிரியரை அணுகிய பொழுது உரிய பதிலளிக்காமல் அலட்சியமாக சென்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினரிடம் மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். வகுப்பில் மாணவர்கள் அட்டகாசம் செய்ததால் அடித்ததாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

 

இதையடுத்து இடி தரப்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பணி நிர்வாகத்திடம் மாணவர்களை தாக்க கூடாது என அறிவுறுத்தினார்.

 

Right Menu Icon