அசோக்குமாரின் முன்ஜாமீன் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்: விசாரணை ஒத்திவைப்பு
அசோக்குமாரின் முன்ஜாமீன் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்: விசாரணை ஒத்திவைப்பு
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.





