தனியார் வாகனங்களில் விதிகளை மீறி பயன்படுத்தப்படும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்..!
நெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
நெல்லையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் சாலை விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்டவை எனக்கூறி அதிரடியாக அப்புறப்படுத்தினர்.





