காமெடி நடிகர் கைது..!
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான தெலுங்கு நடிகர் போசானி கிருஷ்ண முரளி போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெகன்மோகன் ஆட்சியின் பொழுது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தாரையும் இழிவுபடுத்தும் வகையில் பொதுவெளியில் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு போசானி கிருஷ்ண முரளி மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.





