திருப்பூரில் வெடிகுண்டு மிரட்டல்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எதுவும் தெரியவில்லையென உறுதி செய்யப்பட்டதையடுத்து, இது ஒரு தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





